பதிவு செய்த நாள்
18 ஏப்2019
03:30
புதுடில்லி: ‘ஸ்டெர்லிங் அண்டு வில்சன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பம் செய்துள்ளது.
இந்நிறுவனம், ‘ஷபூர்ஜி பலோன்ஜி அண்டு கம்பெனி’ நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்நிறுவனம், சூரிய ஒளி மின்சாரத்துக்கான பொறியியல், கட்டுமானப் பிரிவில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனம், 26 நாடுகளில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலகமெங்கும் பல்வேறு இடங்களில் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.
ஸ்டெர்லிங் அண்டு வில்சன் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிடவும் முடிவு செய்துள்ளது.
‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், ஆக்ஸிஸ் கேப்பிட்டல், கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ், டாய்ச்சி ஈக்குவிட்டிஸ் இந்தியா, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்’ ஆகியவை, இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை உலகளவில் ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளன. ‘இண்டஸ்இண்ட் பேங்க், யெஸ் செக்யூரிட்டிஸ்’ ஆகியவை பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|