பங்கு வெளியீட்டில், ‘ஸ்டெர்லிங் அண்டு வில்சன்’ பங்கு வெளியீட்டில், ‘ஸ்டெர்லிங் அண்டு வில்சன்’ ... வருமான வரி படிவம் – 16ல் மாற்றம்; வரி ஏய்ப்பை தடுக்க கூடுதல் விபரங்கள் சேர்ப்பு வருமான வரி படிவம் – 16ல் மாற்றம்; வரி ஏய்ப்பை தடுக்க கூடுதல் விபரங்கள் ... ...
‘தொலைதொடர்பு துறையை எந்த கட்சியும் கண்டுக்கல’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
03:32

புதுடில்லி: ‘எந்த அரசியல் கட்சியும், தொலைதொடர்பு துறையின் சீர்திருத்தம் குறித்து, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை’ என, ஆய்வு நிறுவனமான, ‘பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரீசர்ச்’ கூறியுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள, தொலைதொடர்பு துறைக்கு எந்தவொரு தீர்வு திட்டமும் இடம் பெறவில்லை.தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் குறைந்து, கடன் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தொலைதொடர்பு துறையின் வளர்ச்சிக்கான சீர்திருத்த கொள்கைகள் குறித்து, எந்த கட்சியும் அக்கறை காட்டவில்லை.

‘விவசாயிகளின் வருவாயை, 2022ல் இரு மடங்காக உயர்த்துவோம்’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது. ‘வரிகளை குறைப்போம்’ என, காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த இரு கட்சிகளின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள், மக்களிடம் பணப்புழக்கம் பெருகி, செலவுகள் அதிகரிக்க துணை புரியும்.

வளர்ச்சி:
இது, ஒரு வகையில், தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். இந்தியாவில், மொபைல் போன் சந்தாதாரர் வளர்ச்சி நன்கு உள்ளது. தொலைதொடர்பு சேவை துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி, 1.7 சதவீதமாக உள்ளது. இது, ஆசியாவின், 1 சதவீத வளர்ச்சியை விட அதிகம்.கடந்த, 2011ல், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ், அகண்ட அலைவரிசை வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தது.

ஆனால், அதற்கான பணிகள் மந்த நிலையிலேயே இருந்தன. கடந்த, 2014ல், மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த பின், திட்டப் பணிகள் விறுவிறுப்பு அடைந்தன. எனினும், பல முறை இலக்கு தவறியது. இறுதியில், 2018, டிசம்பரில், 50 சதவீத கிராம பஞ்சாயத்துகளில், அகண்ட அலைவரிசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)