பதிவு செய்த நாள்
18 ஏப்2019
03:32
புதுடில்லி: ‘எந்த அரசியல் கட்சியும், தொலைதொடர்பு துறையின் சீர்திருத்தம் குறித்து, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை’ என, ஆய்வு நிறுவனமான, ‘பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரீசர்ச்’ கூறியுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள, தொலைதொடர்பு துறைக்கு எந்தவொரு தீர்வு திட்டமும் இடம் பெறவில்லை.தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் குறைந்து, கடன் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தொலைதொடர்பு துறையின் வளர்ச்சிக்கான சீர்திருத்த கொள்கைகள் குறித்து, எந்த கட்சியும் அக்கறை காட்டவில்லை.
‘விவசாயிகளின் வருவாயை, 2022ல் இரு மடங்காக உயர்த்துவோம்’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது. ‘வரிகளை குறைப்போம்’ என, காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த இரு கட்சிகளின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள், மக்களிடம் பணப்புழக்கம் பெருகி, செலவுகள் அதிகரிக்க துணை புரியும்.
வளர்ச்சி:
இது, ஒரு வகையில், தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும். இந்தியாவில், மொபைல் போன் சந்தாதாரர் வளர்ச்சி நன்கு உள்ளது. தொலைதொடர்பு சேவை துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி, 1.7 சதவீதமாக உள்ளது. இது, ஆசியாவின், 1 சதவீத வளர்ச்சியை விட அதிகம்.கடந்த, 2011ல், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ், அகண்ட அலைவரிசை வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தது.
ஆனால், அதற்கான பணிகள் மந்த நிலையிலேயே இருந்தன. கடந்த, 2014ல், மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த பின், திட்டப் பணிகள் விறுவிறுப்பு அடைந்தன. எனினும், பல முறை இலக்கு தவறியது. இறுதியில், 2018, டிசம்பரில், 50 சதவீத கிராம பஞ்சாயத்துகளில், அகண்ட அலைவரிசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|