பதிவு செய்த நாள்
19 ஏப்2019
04:34
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல் சேவையில், பதிவிறக்க வேகம் அதிகரித்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மொபைல் போன் சேவை குறித்து, ஆய்வு நிறுவனமான ஓபன்சிக்னல் வெளியிட்டுள்ள அறிக்கை:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல்போன் சார்ந்த அகண்ட அலைவரிசை சேவையின் தரம் உயர்ந்துள்ளது. முன்னர் இருந்ததை விட, மொபைல் போனில் படங்கள், தரவுகள் ஆகியவற்றின் பதிவிறக்க வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின், ‘4ஜி’ தொழில்நுட்பத்திலான அகண்ட அலைவரிசை சேவை கிடைக்காததால், நுகர்வோர் அனுபவத்தில், போட்டியாளர்களை விட, பின்தங்கியுள்ளது.
இதன், ‘3ஜி’ சேவையில், கடந்த ஆறு மாதங்களில், பதிவிறக்க வேகம், 7 சதவீதம் அதிகரித்து உள்ளது. மொபைல் போனில், சராசரி பதிவிறக்க வேகத்தில், பார்தி ஏர்டெல், 1 வினாடிக்கு, 8.7 மெகாபிட் திறனுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ, 6.3 எம்.பி.பி.எஸ்., வோடபோன், 5.9 எம்.பி.பி.எஸ்., மற்றும் ஐடியா, 5.4 எம்.பி.பி.எஸ்., ஆகியவற்றுடன் உள்ளன. அதிக அளவில், ‘4ஜி’ சேவை பயன்பாட்டில், ரிலையன்ஸ் ஜியோ, 97.5 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, பார்தி ஏர்டெல், 85.6 சதவீதம்; ஐடியா, 77 சதவீதம்; வோடபோன், 76.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
மொபைல் போனில், படங்கள், தரவுகள் ஆகியவற்றின் பதிவேற்ற வேகத்தில், ஐடியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|