பதிவு செய்த நாள்
20 ஏப்2019
05:20
புதுடில்லி : வங்கிகள் வாரியம், வங்கித் துறையில், 75 மூத்த அதிகாரிகளை, தலைமை பொறுப்பிற்கு தகுதியுள்ளவர்கள் என, கண்டறிந்துள்ளது.
பி.பி.சர்மா தலைமையிலான, வங்கிகள் வாரியம், பொதுத் துறை வங்கிகளுக்கு பொருத்தமான முழு நேர இயக்குனர்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் பணியை மேற்கொள்கிறது.அத்துடன், பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக மேலாண்மை, கடன் செலவினங்களை குறைப்பது, கடன் ஒதுக்கீட்டு திறனை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும், பரிந்துரைக்கிறது.
இதன்படி, வங்கிகள் வாரியம், மத்திய நிதியமைச்சகத்திற்கு அளித்துள்ள பரிந்துரையில், வங்கிகளின் தலைமை பொறுப்புக்கு ஏற்ற, 75 மூத்த வங்கி அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக்காக, மொத்தம், 450 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில், இந்தாண்டுக்கு, 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, சர்வதேச தரத்திலான, இந்திய நிறுவனத்தின் மூலம், தலைமை பொறுப்பிற்கு தேவையான திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என, வங்கிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|