‘முத்ரா’ திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை ‘முத்ரா’ திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை ...  குளிர்பான நுகர்வு இரு மடங்கு உயரும் குளிர்பான நுகர்வு இரு மடங்கு உயரும் ...
2 மாதத்தில் இழப்பு 200 கோடி ரூபாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
23:45

நாமக்கல்: 'நெக்' நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 40 காசு குறைத்து, வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். அதனால், பண்ணையாளர்களுக்கு, இரண்டு மாதத்தில், 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நெக் நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்ப வெப்பநிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆனால், வியாபாரிகள், 'நெக்' நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 40 காசு வரை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். அதன் மூலம், உற்பத்தி செலவை காட்டிலும், பண்ணையாளர்களுக்கு, தினமும், கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுவதால், கலக்கம் அடைந்துள்ளனர்.


தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள்சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:'நெக்' நிர்ணயம் செய்யும் விலைக்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 25 காசு குறைத்து விற்பனை செய்ய, 'நெக்' அறிவுறுத்தி உள்ளது.ஆனால், வியாபாரிகள், 40 காசு வரை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே, ஒரு முட்டை உற்பத்தி செலவில் இருந்து, 1 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.அதன் மூலம், நாள் ஒன்றுக்கு, 3.50 கோடி ரூபாய் என்ற அடிப்படையில், இரண்டு மாதமாக, 200 கோடி ரூபாய், பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, கோழிப் பண்ணையை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் உள்ளது.

தற்போது, மக்காசோளம் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசு, 5 லட்சம் டன் இறக்குமதியில், 1 லட்சம் டன்னுக்கு அனுமதி அளித்துள்ளது. அவை, இன்னும் வந்து சேரவில்லை.அவற்றை முழுமையாக இறக்குமதி செய்ய, மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், வீணாகும் கோதுமை, அரிசியை, மானிய விலையில் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே நிலை நீடித்தால், கோழிப் பண்ணை தொழிலை நம்பியுள்ள பண்ணையாளர்கள், தொழிலாளர்கள் என, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)