2 மாதத்தில் இழப்பு 200 கோடி ரூபாய் 2 மாதத்தில் இழப்பு 200 கோடி ரூபாய் ... இந்தியாவில் அன்னிய நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு இந்தியாவில் அன்னிய நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு ...
குளிர்பான நுகர்வு இரு மடங்கு உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
23:48

புதுடில்லி: 'இந்தியாவில், ஓராண்டில் தனி நபர் அருந்தும் குளிர்பானங்கள் அளவு, 2021ல் இரு மடங்கு உயரும்' என, வி.பி.எல்., நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

'வருண் பிவரேஜஸ்' என்ற இந்நிறுவனம், 'பெப்சிகோ இந்தியா' நிறுவனத்தின், குளிர்பானங்களை பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், 2016 நிலவரப்படி, ஒருவர், ஆண்டுக்கு சராசரியாக, 44 பாட்டில், பழரசம் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்துவதாக, புள்ளிவிபரம் கூறுகிறது.இது, 2021ல், 84 பாட்டில்களாக உயரும் என, ஆய்வில் தெரிய வந்து உள்ளது.இந்த வளர்ச்சிக்கு, கிராமப்புறங்களின் பொருளாதார முன்னேற்றம், பெருகும் நடுத்தர வர்க்கத்தினர், மின் மயமாகி வரும் ஊரகப் பகுதிகள், நிறுவனங்களின் தொடர் கண்டுபிடிப்புகள், நவீன, 'பேக்கேஜிங்' போன்றவற்றை குறிப்பிடலாம்.

பல நிறுவனங்கள், குக்கிராமங்களிலும் அவற்றின் குளிர்பானங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால், மக்களின் குளிர்பான நுகர்வு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், கோலா சாராத குளிர்பானங்கள் ஆகியவற்றில், எலுமிச்சை சார்ந்த குளிர்பானங்கள் பிரிவு வேகமாக வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மக்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பாட்டிலில் அடைக்கப்பட்ட பழரச பானங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இவ்வகை பானங்கள், காலை சிற்றுண்டியிலும், விருந்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறத் துவங்கி உள்ளன.கிராமங்களில், குளிர்பானங்கள் சுலபமாக கிடைக்கின்றன. கிராம மக்களும், குளிர்பானங்களுக்கு தாராளமாக செலவு செய்கின்றனர். இதனால், குளிர்பானங்கள் பயன்பாட்டில், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் காணப்பட்ட இடைவெளி குறைந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஓராண்டில் ஒருவரின் சராசரி குளிர்பான நுகர்வுநாடு - பாட்டில்அமெரிக்கா - 1,496மெக்சிகோ - 1,489ஜெர்மனி - 1,221பிரேசில் - 537இந்தியா - 60

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)