பதிவு செய்த நாள்
20 ஏப்2019
23:48
புதுடில்லி: 'இந்தியாவில், ஓராண்டில் தனி நபர் அருந்தும் குளிர்பானங்கள் அளவு, 2021ல் இரு மடங்கு உயரும்' என, வி.பி.எல்., நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
'வருண் பிவரேஜஸ்' என்ற இந்நிறுவனம், 'பெப்சிகோ இந்தியா' நிறுவனத்தின், குளிர்பானங்களை பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், 2016 நிலவரப்படி, ஒருவர், ஆண்டுக்கு சராசரியாக, 44 பாட்டில், பழரசம் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்துவதாக, புள்ளிவிபரம் கூறுகிறது.இது, 2021ல், 84 பாட்டில்களாக உயரும் என, ஆய்வில் தெரிய வந்து உள்ளது.இந்த வளர்ச்சிக்கு, கிராமப்புறங்களின் பொருளாதார முன்னேற்றம், பெருகும் நடுத்தர வர்க்கத்தினர், மின் மயமாகி வரும் ஊரகப் பகுதிகள், நிறுவனங்களின் தொடர் கண்டுபிடிப்புகள், நவீன, 'பேக்கேஜிங்' போன்றவற்றை குறிப்பிடலாம்.
பல நிறுவனங்கள், குக்கிராமங்களிலும் அவற்றின் குளிர்பானங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால், மக்களின் குளிர்பான நுகர்வு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், கோலா சாராத குளிர்பானங்கள் ஆகியவற்றில், எலுமிச்சை சார்ந்த குளிர்பானங்கள் பிரிவு வேகமாக வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மக்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பாட்டிலில் அடைக்கப்பட்ட பழரச பானங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இவ்வகை பானங்கள், காலை சிற்றுண்டியிலும், விருந்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறத் துவங்கி உள்ளன.கிராமங்களில், குளிர்பானங்கள் சுலபமாக கிடைக்கின்றன. கிராம மக்களும், குளிர்பானங்களுக்கு தாராளமாக செலவு செய்கின்றனர். இதனால், குளிர்பானங்கள் பயன்பாட்டில், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் காணப்பட்ட இடைவெளி குறைந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஓராண்டில் ஒருவரின் சராசரி குளிர்பான நுகர்வுநாடு - பாட்டில்அமெரிக்கா - 1,496மெக்சிகோ - 1,489ஜெர்மனி - 1,221பிரேசில் - 537இந்தியா - 60
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|