இந்திய ஏற்றுமதி ரூ.37.31 லட்சம் கோடி இந்திய ஏற்றுமதி ரூ.37.31 லட்சம் கோடி ... பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆர்பிஐ ரூ.25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆர்பிஐ ரூ.25,000 கோடி கடன் பத்திரம் ... ...
ஜியோவில், சாப்ட் பேங்க் ரூ.21,000 கோடி முதலீடு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
07:02

மும்பை : முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தில், ஜப்பானைச் சேர்ந்த நிதி நிறுவனமான, சாப்ட் பேங்க், 14 ஆயிரம் கோடி முதல், 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சவுதி அரேபியாவைச் சேர்ந்த, ‘அரம்கோ’ நிறுவனம், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில், 25 சதவீத பங்குகளை வாங்குவது குறித்து, பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது.இந்த வகையில், அரம்கோ நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், 70 ஆயிரம் கோடி முதல், 1 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த இரு முதலீடுகள் குறித்து, ரிலையன்ஸ் குழுமம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

கடந்த, 2016 செப்., 5ல் ரிலையன்ஸ் ஜியோ, ‘4ஜி’ தொழில்நுட்பத்திலான, தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது.இத்துறையில், இரண்டரை ஆண்டுகளில், 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 3.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது; இதில், 50 சதவீதம் பங்கு மதிப்பு என, நிதி துறையைச் சேர்ந்த, ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்துள்ளது. அதுபோல, சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வரும், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பு, 2.45 லட்சம் கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, 7 லட்சம் கி.மீ., கம்பி வட பிரிவு மற்றும் தொலை தொடர்பு கோபுரங்கள் பிரிவை, இரு தனி நிறுவனங்களின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனால், 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோவின் நிகர கடன், 3,320 கோடி டாலராகக் குறைந்துள்ளது. இது, மூன்றாவது காலாண்டில், 4,270 கோடி டாலராக இருந்தது.

பெருகி வரும் வருவாய், சந்தாதாரர் எண்ணிக்கை உயர்வு, குறைந்து வரும் கடன்கள் போன்றவற்றால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில், சாப்ட் பேங்க் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)