ஐ.ஜி.எஸ்.டி., பயனை ஜி.எஸ்.டி.,யில் சரி செய்யலாம்: மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியம் அறிவிப்பு ஐ.ஜி.எஸ்.டி., பயனை ஜி.எஸ்.டி.,யில் சரி செய்யலாம்: மத்திய மறைமுக மற்றும் சுங்க ... ...  ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு : ஆக்சிஸ்  வங்கி அபராதம் விதிப்பு ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு : ஆக்சிஸ் வங்கி அபராதம் விதிப்பு ...
கே.ஒய்.சி., தாக்கல் செய்யாத நிறுவனங்கள்: ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2019
00:36

புதுடில்லி: மத்திய அரசிடம் பதிவு செய்துள்ள, 11 லட்சம் நிறுவனங்களில், இதுவரை, 4 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே, ‘கே.ஒய்.சி.,’ எனப்படும் சுய தகவல் படிவங்களை வழங்கியுள்ளன. இதன் காரணமாக, நேற்று இப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கான, ‘கெடு’, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

‘கே.ஒய்.சி.,’ எனப்படும், ‘வாடிக்கையாளரை அறிந்து கொள்வோம்’ விதிமுறையை வங்கிகள் பின்பற்றுகின்றன. இதன் மூலம், வங்கிக் கணக்கு துவங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விபரங்களையும், வங்கிகள் அறிந்து கொள்கின்றன.


படங்கள்
அதுபோல, பதிவு செய்த ஒரு நிறுவனத்தின் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வதற்கான, ‘கே.ஒய்.சி.,’ விதிமுறையை, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கடந்த, பிப்ரவரி, 25ல் அறிமுகப்படுத்தியது. இதற்காக, அமைச்சகத்தின் வலைதளத்தில் ஆக்ட்டிவ் என்ற, ‘ஐ.என்.சி., –22’ மின்னணு படிவம் வெளியிடப்பட்டது. அதில், ஒரு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக கட்டடங்களின், வெளிப்புறம் மற்றும் உட்புற படங்களை பதிவேற்ற வேண்டும்.படிவத்தில், ‘டிஜிட்டல் சிக்னேச்சர்’ எனப்படும் மின்னணு கையொப்பமிட்ட, ஒரு இயக்குனர் அல்லது முக்கிய நிர்வாகியின் படம் இடம் பெற வேண்டும்.

இது தவிர, நிறுவனத்தின் இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, கணக்கு தணிக்கை அதிகாரி, நிறுவன செயலர் உள்ளிட்டோர் விபரங்களையும் வழங்க வேண்டும்.போலி நிறுவனங்களின் புழக்கத்தை குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இடம் பெற முடியாது.அத்தகைய நிறுவனங்களுக்கு, ஐ.என்.சி., – 22 படிவமும் கிடைக்காது. அதனால், அவை விண்ணப்பிக்கவும் முடியாது. இதன் மூலம், உண்மையாக தொழில் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, பதிவேட்டில் இடம் பெறும் நிலை உருவாகியுள்ளது.
நீக்கம்
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத, 3.38 லட்சம் போலி நிறுவனங்கள், பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போது, 11.35 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 7 – 7.5 லட்சம் நிறுவனங்கள், கே.ஒய்.சி., அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை, 4 லட்சம் நிறுவனங்கள், கே.ஒய்.சி., சமர்ப்பித்துள்ளன. இதற்கான, ‘கெடு’, நேற்று முன்தினம் முடிவடைய இருந்தது.

எனினும், இதுவரை இப்படிவத்தை அளிக்காத நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், விண்ணப்ப காலம், ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன் பின், கே.ஒய்.சி., அளிக்காத நிறுவனங்கள், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, விண்ணப்பிக்கலாம். அதுவரை, அந்த நிறுவனங்கள், இணைப்பு அல்லது பிரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மூலதன செயல்பாடுகள், இயக்குனர்கள், அலுவலகங்கள் ஆகியவை தொடர்பான எந்த மாறுதலையும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

18 லட்சம் பேர் நீக்கம்
மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், 2018, அக்டோபரில், நிறுவன இயக்குனர்களுக்கான, ‘கே.ஒய்.சி.,’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக, ‘டி.ஐ.ஆர்., 3 கே.ஒய்.சி.,’ படிவம் வெளியிடப்பட்டது. மொத்தம், 32 லட்சம் இயக்குனர்களில், 14 லட்சம் பேர், இப்படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்காத, 18 லட்சம் பேரின் ‘டி.ஐ.என்.,’ எனப்படும் இயக்குனர் பதிவு எண்கள் நீக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)