கே.ஒய்.சி., தாக்கல் செய்யாத நிறுவனங்கள்: ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு கே.ஒய்.சி., தாக்கல் செய்யாத நிறுவனங்கள்: ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு ...  ‘ஏர் – இந்தியா’ சேவை 6 மணி நேரம் பாதிப்பு ‘ஏர் – இந்தியா’ சேவை 6 மணி நேரம் பாதிப்பு ...
ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு : ஆக்சிஸ் வங்கி அபராதம் விதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2019
01:48

புதுடில்லி: தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் வங்கி, ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள், பிற வங்கி ஏ.டி.எம்., களை பயன்படுத்தும்போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்தால், அபராதம் விதிக்கப்படும்.ஒவ்வொரு முறையும், பணம் இல்லை என, மறுக்கப்படும் போது, 25 ரூபாய், வாடிக்கையாளர் கணக்கில் பிடித்தம் செய்யப்படும்.எனினும், இதில், வெளிநாடு வாழ் இந்தியர், முன்னுரிமை கணக்கு, சிறப்பு அரசு கணக்கு உள்ளிட்டவற்றுக்கு அபராதத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.தற்போது, வங்கிக் கணக்கில் போதிய பணமின்றி திரும்பும் காசோலைக்கு, வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.


இனி, கணக்கில் பணம் இருந்தும், வாடிக்கையாளரின் கவனக் குறைவால் அல்லது பிழையால் காசோலை திரும்பினாலும், அபராதம் வசூலிக்கப்படும்.இதில், சிறுசேமிப்பு, காசோலை வசதியற்ற அடிப்படை சேமிப்பு கணக்கு, வெளிநாடு வாழ் இந்தியர் கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், சேமிப்பு மற்றும் ஊதியக் கணக்கில், வெளியூர் காசோலை திரும்பினால் வசூலிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறைகள், ஜூன் 1ல் அமலுக்கு வருவதாக, ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)