பதிவு செய்த நாள்
28 ஏப்2019
01:48
புதுடில்லி: தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் வங்கி, ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள், பிற வங்கி ஏ.டி.எம்., களை பயன்படுத்தும்போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்தால், அபராதம் விதிக்கப்படும்.ஒவ்வொரு முறையும், பணம் இல்லை என, மறுக்கப்படும் போது, 25 ரூபாய், வாடிக்கையாளர் கணக்கில் பிடித்தம் செய்யப்படும்.எனினும், இதில், வெளிநாடு வாழ் இந்தியர், முன்னுரிமை கணக்கு, சிறப்பு அரசு கணக்கு உள்ளிட்டவற்றுக்கு அபராதத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.தற்போது, வங்கிக் கணக்கில் போதிய பணமின்றி திரும்பும் காசோலைக்கு, வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இனி, கணக்கில் பணம் இருந்தும், வாடிக்கையாளரின் கவனக் குறைவால் அல்லது பிழையால் காசோலை திரும்பினாலும், அபராதம் வசூலிக்கப்படும்.இதில், சிறுசேமிப்பு, காசோலை வசதியற்ற அடிப்படை சேமிப்பு கணக்கு, வெளிநாடு வாழ் இந்தியர் கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், சேமிப்பு மற்றும் ஊதியக் கணக்கில், வெளியூர் காசோலை திரும்பினால் வசூலிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறைகள், ஜூன் 1ல் அமலுக்கு வருவதாக, ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|