ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு : ஆக்சிஸ்  வங்கி அபராதம் விதிப்பு ஏ.டி.எம்., காசோலை பயன்பாடு : ஆக்சிஸ் வங்கி அபராதம் விதிப்பு ...  சீனாவை கைகழுவும் அமெரிக்க நிறுவனங்கள்: இந்தியாவில் தயாரிப்பு பிரிவுகளை துவக்க ஆர்வம் சீனாவை கைகழுவும் அமெரிக்க நிறுவனங்கள்: இந்தியாவில் தயாரிப்பு பிரிவுகளை ... ...
‘ஏர் – இந்தியா’ சேவை 6 மணி நேரம் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2019
01:50

புதுடில்லி:‘ஏர் – இந்தியா’ விமான நிறுவனத்தின் ‘சாப்ட்வேர்’ 6 மணி நேரம் முடங்கியதால், டில்லி உட்பட சர்வதேச விமான நிலையங்களில், நுாற்றுக்கணக்கானோர், பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாயினர்.

நேற்று காலை, 3:00 மணியளவில், ஏர் – இந்தியா விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் வந்தவர்களுக்கு, கணினி மூலம், ‘போர்டிங் பாஸ்’ எனப்படும் அனுமதி சீட்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு, ‘சாப்ட்வேர்’ முடங்கியது தான் காரணம் என, கூறப்பட்டது.இதனால், உலகெங்கிலும் உள்ள ஏர் – இந்தியாவிமான பயணியர், பயணம் மேற்கொள்ள முடியாமல், விமான நிலையங்களில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சாப்ட்வேர் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை, 9:00 மணியளவில், மீண்டும் ஏர் – இந்தியா விமான சேவை துவங்கியது.

இது குறித்து ஏர் – இந்தியா நிறுவன தலைவர், அஷ்வனி லோஹானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஏர் – இந்தியாவின் பயணியர் சேவை தொடர்பான கணினி செயல்பாடுகளை, அமெரிக்காவின், அட்லாண்டாவைச் சேர்ந்த, ‘சிட்டா’ நிறுவனம் கையாள்கிறது.பயணியர் முன்பதிவு, அனுமதி சீட்டு, உடமைகள் பதிவு உள்ளிட்டவற்றை கையாளும் இந்நிறுவனம், காலையில், கணினியின் ‘சர்வர்’ பராமரிப்பு பணியை மேற்கொண்டது.அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ஏர் – இந்தியா பயணியர் சேவைக்கான சாப்ட்வேர் முடங்கியது.

இதனால், டில்லி உள்ளிட்ட சில பெரிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு, அனுமதி சீட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கோளாறு சரிசெய்யப்பட்டு, விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. எனினும், 6 மணி நேரம் சேவை முடங்கியதால், சில விமான பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஜூன், 23ல், ஏர் – இந்தியா, இதே போன்ற பிரச்னையை சந்தித்தது. சிட்டா நிறுவனத்தின் சர்வர் முடங்கியதால், 3 மணி நேரம் ஏர் – இந்தியா பயணியர் அவதிக்கு ஆளாயினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)