பதிவு செய்த நாள்
28 ஏப்2019
01:50
புதுடில்லி:‘ஏர் – இந்தியா’ விமான நிறுவனத்தின் ‘சாப்ட்வேர்’ 6 மணி நேரம் முடங்கியதால், டில்லி உட்பட சர்வதேச விமான நிலையங்களில், நுாற்றுக்கணக்கானோர், பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாயினர்.
நேற்று காலை, 3:00 மணியளவில், ஏர் – இந்தியா விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் வந்தவர்களுக்கு, கணினி மூலம், ‘போர்டிங் பாஸ்’ எனப்படும் அனுமதி சீட்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு, ‘சாப்ட்வேர்’ முடங்கியது தான் காரணம் என, கூறப்பட்டது.இதனால், உலகெங்கிலும் உள்ள ஏர் – இந்தியாவிமான பயணியர், பயணம் மேற்கொள்ள முடியாமல், விமான நிலையங்களில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சாப்ட்வேர் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை, 9:00 மணியளவில், மீண்டும் ஏர் – இந்தியா விமான சேவை துவங்கியது.
இது குறித்து ஏர் – இந்தியா நிறுவன தலைவர், அஷ்வனி லோஹானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஏர் – இந்தியாவின் பயணியர் சேவை தொடர்பான கணினி செயல்பாடுகளை, அமெரிக்காவின், அட்லாண்டாவைச் சேர்ந்த, ‘சிட்டா’ நிறுவனம் கையாள்கிறது.பயணியர் முன்பதிவு, அனுமதி சீட்டு, உடமைகள் பதிவு உள்ளிட்டவற்றை கையாளும் இந்நிறுவனம், காலையில், கணினியின் ‘சர்வர்’ பராமரிப்பு பணியை மேற்கொண்டது.அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ஏர் – இந்தியா பயணியர் சேவைக்கான சாப்ட்வேர் முடங்கியது.
இதனால், டில்லி உள்ளிட்ட சில பெரிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு, அனுமதி சீட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கோளாறு சரிசெய்யப்பட்டு, விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. எனினும், 6 மணி நேரம் சேவை முடங்கியதால், சில விமான பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன், 23ல், ஏர் – இந்தியா, இதே போன்ற பிரச்னையை சந்தித்தது. சிட்டா நிறுவனத்தின் சர்வர் முடங்கியதால், 3 மணி நேரம் ஏர் – இந்தியா பயணியர் அவதிக்கு ஆளாயினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|