‘ஏர் – இந்தியா’ சேவை 6 மணி நேரம் பாதிப்பு ‘ஏர் – இந்தியா’ சேவை 6 மணி நேரம் பாதிப்பு ...  விலகுமா, மதிப்பீட்டு சந்தேகங்கள்? விலகுமா, மதிப்பீட்டு சந்தேகங்கள்? ...
சீனாவை கைகழுவும் அமெரிக்க நிறுவனங்கள்: இந்தியாவில் தயாரிப்பு பிரிவுகளை துவக்க ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2019
01:54

வாஷிங்டன்: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் சீனாவின் கொள்கையால், அந்நாட்டில் செயல்பட்டு வரும் தயாரிப்பு பிரிவுகளை, இந்தியாவிற்கு மாற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த, 200 நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா, பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.


அமேசான்:
இதையடுத்து, சீன அதிபர், ஜீ ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதித்துள்ளது.அத்துடன், உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால், சீன நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்திஉள்ளன.இந்த போட்டியை தாக்குப் பிடிக்க முடியாமல், வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், அமேசான் நிறுவனம், சீனாவில் இருந்து வெளியேறுவதாக, சமீபத்தில் அறிவித்தது. ஏற்கெனவே, அமெரிக்காவைச் சேர்ந்த, வாடகை கார் நிறுவனமான, ஊபர், சீனாவை விட்டு வெளியேறி விட்டது.இத்தகைய சூழலில், மேலும் பல அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற திட்டமிட்டுள்ளன.

சீர்திருத்தம்இது குறித்து, ‘யு.எஸ். ஐ.எஸ்.பி.எப்.,’ என, சுருக்கமாக அழைக்கப்படும், அமெரிக்க – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர், முகேஷ் அகி கூறியதாவது:சீனாவில் செயல்பட்டு வரும், அமெரிக்காவைச் சேர்ந்த, 200 நிறுவனங்கள், தயாரிப்பு பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்ற ஆர்வமுடன் எங்களை அணுகியுள்ளன. இந்நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, நிலம் கையகப்படுத்துவது முதல் சுங்க வரி வரையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.தொழில் துவங்கும் நடைமுறை மேலும் வெளிப்படையாகவும், விரைவான செயல்பாட்டை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளை, பொதுத் தேர்தல் முடிந்த பின், மத்தியில் அமைய உள்ள அரசு, மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மின்னணு வர்த்தகம், தரவுகளை உள்நாட்டில் சேமிப்பது ஆகியவற்றில், மத்திய அரசின் கொள்கைகள், சர்வதேச வணிகத்தை விட, உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பிற்குத் தான், அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தன. அதனால், தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்கும் வகையிலும், நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, ஸ்திரமான வர்த்தக கொள்கைகளை வெளியிட வேண்டும் என, புதிய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்தவகையில், அன்னிய முதலீடுகளை ஈர்க்க, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கையை, கூட்டமைப்பு உருவாக்கி உள்ளது.அதில், வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

ஒப்பந்தம்:

முக்கியமாக, இந்தியா – அமெரிக்கா இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், சீனாவின் மலிவு விலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பை, இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். அமெரிக்க சந்தையிலும் அதிக பங்களிப்பை, இந்திய நிறுவனங்களால் பெற முடியும்.இதுபோன்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, மத்தியில் அமைய உள்ள அரசிடம் வழங்கப்படும். பரிந்துரைகளின் அடிப்படையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டால், சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், தயாரிப்பு பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்றும். இதனால், உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். வர்த்தகம் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

முதலீடு:கடந்த நான்கு ஆண்டுகளில், அமெரிக்க – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பைச் சேர்ந்த அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில், 3.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன-முகேஷ் அகி, தலைவர், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)