பதிவு செய்த நாள்
29 ஏப்2019
06:54
ஓய்வு காலத்திற்கான சேமிப்பில், இந்தியர்கள் ஈடுபட்டு வருவதும், ஓய்வு காலத்திற்கான தயார் நிலையில், இந்தியா மேம்பட்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளன.
இது தொடர்பாக, ‘ஏகான்’ ஓய்வு கால தயார் நிலை அட்டவனை ஆய்வில், சர்வதேச சராசரியான, 5.9 புள்ளியை விட அதிகமாக,இந்தியா, 7.3 புள்ளி பெற்றுள்ளது. இந்த அட்டவனை படி, 7 முதல் 8 புள்ளி பெற்றிருந்தால் ஓய்வு கால தயார் நிலை சிறப்பானதாக இருப்பதாக பொருள்.மேலும், இந்தியர்களில், 50 சதவீதத்தினருக்கு மேல், இயல்பாகவே சேமிக்கும் பழக்கம் கொண்டிருப்பதாகவும், இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சர்வதேச அளவில், 39 சதவீதத்தினர், இயல்பாக சேமிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.
இந்தியர்களில் பெரும்பாலானோர், நிதி திட்டத்தை வகுத்துக் கொண்டிருப்பதகாவும், ஆய்வு தெரிவிக்கிறது. நிதி கல்வி தொடர்பான விழிப்புணர்வு, இந்தியர்களை, ஓய்வு காலத்திற்கு தயாராவது தொடர்பான விழிப்புணர்வையும் பெற வைத்துள்ளது.இந்தியா உள்ளிட்ட, 15 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், இதில் இந்தியாவை விட பின் தங்கியுள்ளன.
குறைவான பணி வாழ்க்கை காலம், அரசு பென்ஷன் பாதுகாப்பு இல்லாதது, கூட்டுக்குடும்பங்கள் மாறி வருவது ஆகியவை இந்தியர்கள் மத்தியில் ஓய்வு காலத்திற்காக திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|