தேர்தலால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறைதேர்தலால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ...  உணவகங்கள் வரி ஏய்ப்பு தடுக்க புதிய திட்டம் உணவகங்கள் வரி ஏய்ப்பு தடுக்க புதிய திட்டம் ...
கொப்பரை விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
23:12

ஈரோடு: ‘‘கடந்தாண்டு பெய்த பரவலான மழையால், கொப்பரை வரத்து தொடர்ந்து சீராக உள்ளது. இதனால், 13 மாதங்களுக்கு மேலாக, கிலோ, 85 முதல், 100 ரூபாயை கடந்து விலை போகிறது,’’ என, தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்தாண்டு, டெல்டா மாவட்டத்தில், ‘கஜா’ புயல் தாக்கியதால், பல லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டன. அதே நேரம், ஈரோடு, திருப்பூர் உட்பட கொங்கு மண்டலம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில், கடந்தாண்டு முழுவதும் சீரான மழை பெய்தது. இதனால், கொப்பரை தேங்காய் வரத்து சீராகவே இருந்தது.

கடந்த, 27ம் தேதி நிலவரப்படி, பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை முதல் தரம், 1 கிலோ, 95.05 முதல், 99.65 ரூபாய்; இரண்டாம் தரம், 45.85 – 93.90 ரூபாய் வரை விற்பனையானது.

இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், வெங்கடாசலம் கூறியதாவது: கடந்தாண்டு கஜா புயலால், டெல்டா மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், தமிழகத்தில் மொத்த தேங்காய், இளநீர், கொப்பரை உற்பத்தியில், 30 முதல், 40 சதவீதம் பாதிக்கப்பட்டது. ஆனாலும், கொங்கு மண்டலத்திலும், கர்நாடகா, கேரளாவிலும் அதிக தேங்காய் விளைச்சல் தொடர்கிறது. கர்நாடகா, கேரளாவை விட, நல்ல விலை கிடைப்பதால், கொப்பரையை இங்கு கொண்டு வந்து விற்கின்றனர்.தேசிய அளவில் எண்ணெய் தேவை அதிகரிப்பு, பிற பயன்பாட்டுக்கு எண்ணெய் வினியோகம் அதிகரிப்பால், காய் வரத்தும், விலை உயர்வும் நீடிக்கிறது.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)