பதிவு செய்த நாள்
29 ஏப்2019
23:16
புதுடில்லி : நுகர்வோரிடம் வசூலிக்கும், ஜி.எஸ்.டி.,யை, அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றும் உணவகங்கள் மற்றும் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, புதிய செயல் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில், ‘காம்போசிஷன்’ எனப்படும் கலவை வரி திட்டத்தை தேர்வு செய்து, காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யலாம்.ஆனால், இந்நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம், ஜி.எஸ்.டி., வசூலிக்கக் கூடாது. அவற்றின் ரசீதில், கலவை வரி விதிப்பின் கீழ் உள்ளதாக அச்சிட வேண்டும்.
இத்திட்டத்தில் வர்த்தகர்கள், விற்றுமுதலில், 1 சதவீதம்; உணவகங்கள் மற்றும் சேவை வழங்குவோர் முறையே, 5 மற்றும் 6 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.ஆனால், இந்நிறுவனங்கள் குறிப்பாக உணவகங்கள், ஜி.எஸ்.டி., வசூலிப்பதாக, ஏராளமான புகார்கள் வந்துள்ளன.அதனால், கணினி சார்ந்த புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, அந்தந்த வட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நுகர்வோர், Iris Peridot ‘ஆப்’ஐ பதிவிறக்கி, ஜி.எஸ்.டி., வசூலிக்கும் உணவகங்கள், அதை அரசுக்கு செலுத்துகிறதா, கணக்கு தாக்கல் செய்கிறதா என்பதை அறியலாம். அதன் அடிப்படையில் புகார் தரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|