உணவகங்கள் வரி ஏய்ப்பு தடுக்க புதிய திட்டம் உணவகங்கள் வரி ஏய்ப்பு தடுக்க புதிய திட்டம் ... வங்கி நடப்பு கணக்கிற்கு புதிய விதிமுறை; கடன் பெற்ற நிறுவனங்களுக்கு, ‘கிடுக்கிப்பிடி’ வங்கி நடப்பு கணக்கிற்கு புதிய விதிமுறை; கடன் பெற்ற நிறுவனங்களுக்கு, ... ...
‘டெலாய்ட்’ நிறுவனத்திற்கு தடை? ஐ.எல்., அண்டு எப்.எஸ்., கணக்கு தணிக்கையில் முறைகேடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
23:18

புதுடில்லி: ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும கணக்கு தணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, அக்குழுமத்தின் கணக்குகளை தணிக்கை செய்த, ‘டெலாய்ட்’ நிறுவனத்திற்கு, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதற்கு, இக்குழுமத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணம் என, தெரிய வந்துள்ளது. இதைஅடுத்து, இக்குழுமத்தின் உயரதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், புதிய இயக்குனர் குழு தலைமையில், குழுமத்தின் செயல்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும கணக்கு தணிக்கையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, அக்கணக்குகளை தணிக்கை செய்த, டெலாய்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, நிறுவன சட்டம், 140, பிரிவு, 5ன் கீழ், தடை விதிப்பது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களுடன் கூட்டு சேர்ந்து, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, முறைகேடுகளில் ஈடுபடும் தணிக்கை நிறுவனத்தை தடை செய்ய, இந்த சட்டம் வழி வகுக்கிறது.

இந்நிலையில், டெலாய்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும செயல்பாடுகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு, முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.நாங்கள் அக்குழுமத்தின் கணக்குகளை, அதற்கான சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, தணிக்கை செய்துள்ளோம் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.பல ஆண்டுகளாக, இக்குழுமத்தின் கணக்கு தணிக்கையை மேற்கொண்டு வருகிறோம். கடன்களுக்கு ஈடான பிணை பெறப்பட்டுள்ளது. இதை, ‘நைட் பிராங்க்’ போன்ற நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ முறைகேடு வழக்கில், அந்நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த, ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்’ நிறுவனத்திற்கு, இரண்டு ஆண்டுகள், கணக்கு தணிக்கை செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)