பதிவு செய்த நாள்
30 ஏப்2019
23:15
புதுடில்லி : டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம், ஜி.எஸ்.டி., வரி குறைப்பு பயனை, நுகர்வோருக்கு வழங்காமல், ரூ.4.51 கோடி லாபம் ஈட்டியுள்ளதை, மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகமான, டி.ஜி.ஏ.பி., கண்டுபிடித்துள்ளது.
ஜி.எஸ்.டி., கவுன்சில், 2017, நவ.,15ல், உணவகங்களுக்கான வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைத்தது.இந்த வரிப் பயனை, டாடா ஸ்டார்பக்ஸ் நுகர்வோருக்கு வழங்கவில்லை என, கூறப்படுகிறது. இந்நிறுவனம், வரி குறைப்புக்கு முன் இருந்த, உணவுப் பொருட்களின் அடிப்படை விலையை, வரி குறைப்பிற்கு பின் உயர்த்தியுள்ளது. இதனால், ஜி.எஸ்.டி., குறைந்தும், உணவுப் பொருட்கள் விலை குறைக்கப்படாமல், பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் புகார் தெரிவித்தனர்.
இப்புகார் குறித்து விசாரித்த, மிகை லாப தடுப்பு தலைமை இயக்குனரகம், டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம், உணவுப் பொருட்கள் விலையை குறைக்காமல், 4.51 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக, தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். அந்நிறுவனத்திடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டால், அதை, பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்.
ஆனால், நுகர்வோர், பலராக இருப்பின், அவர்களை அறியமுடியாத பட்சத்தில், நுகர்வோர் நல நிதியத்தில், அத்தொகை சேர்க்கப்படும். இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டை, டாடா ஸ்டார்பக்ஸ் மறுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|