பதிவு செய்த நாள்
02 மே2019
23:29
திருப்பூர்:பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தி வருகின்றன. நேற்று முதல், மீண்டும், கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, அக்., மாதம், ஒரு கேண்டி – 356 கிலோ, 47 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்த பஞ்சு விலை, பிப்., மாதம், 42 ஆயிரத்து, 500 ரூபாயாக குறைந்தது. தற்போது, பஞ்சு கொள்முதல் விலை, கேண்டி, 48 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. போக்குவரத்து செலவினங்களோடு சேர்த்து, நுாற்பாலைகளுக்கு, கேண்டி, 49 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
பஞ்சு விலை உயர்வால், நுாற்பாலைகளின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. எனவே, நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தி வருகின்றன.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து, குளிர்கால ஆடை தயாரிப்புக்கான, ‘ஆர்டர்’கள் திருப்பூர் நோக்கி வரத் துவங்கியுள்ளன. இச்சூழலில், இந்த விலை உயர்வு, ஆடை உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
நுாற்பாலை துறையினர் கூறியதாவது:
கடந்த, 45 நாட்களில் மட்டும் விலை, 13 சதவீதம் உயர்ந்துள்ளது. மூலப்பொருள் விலை உயர்வை எதிர்கொள்ளும் வகையில், நுால் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், பஞ்சு விலையை ஒப்பிடும் போது, மிகக் குறைந்த விகிதத்திலேயே நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|