பதிவு செய்த நாள்
03 மே2019
23:53
புதுடில்லி:பல்வேறு பொருட்கள் வாங்க, நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, மாத தவணையில் திரும்பச் செலுத்துவது, பெரிய நகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘ஸெஸ்ட் மணி’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தாண்டு மார்ச்சில், 50 லட்சம் நுகர்வோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கடனுக்கு பொருட்கள் வாங்கி, மாத தவணையில் திரும்பச் செலுத்துவதில், பாட்னா, லக்னோ, இந்துார், ஜெய்ப்பூர், போபால், ஆமதாபாத் போன்ற சிறிய நகரங்களின் பங்கு, மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வகையில், மூன்றாம் தர சிறிய நகரங்களில், கடன் தவணை பிரிவின் வளர்ச்சி, கடந்த ஆண்டை விட, 1,000 மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில், முதல் மற்றும் இரண்டாம் நிலை பெரு நகரங்களில், தவணையில் கடன் பெற்றோர் எண்ணிக்கை, 54 சதவீதமாக உள்ளது. இது, மூன்றாம் நிலை நகரங்களில், 46 சதவீதமாக உள்ளது.
சிறிய நகரங்களில், பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு, மின்னணு தொழில்நுட்ப பணப் பரிவர்த்தனை போன்றவற்றால், கடன் தவணையில் பொருட்கள் வாங்குவது சுலபமாகியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|