மாத தவணை கடன் துறை 1,000 மடங்கு வளர்ச்சி மாத தவணை கடன் துறை 1,000 மடங்கு வளர்ச்சி ...  ‘இ – வே’ பில்: கிடுக்கிப்பிடி சோதனை ‘இ – வே’ பில்: கிடுக்கிப்பிடி சோதனை ...
பொருளாதார வளர்ச்சி குறைவு? மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2019
00:02

புதுடில்லி:கடந்த, 2018- – 19ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதாக தெரிகிறது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தாண்டு பிப்ரவரியில், மத்திய புள்ளியியல் அலுவலகம், கடந்த நிதியாண்டின், பொருளாதார வளர்ச்சியை, 7.2 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக குறைத்து, மறு மதிப்பீடு செய்திருந்தது.


இது, ஐந்தாண்டுகளில் இல்லாத சரிவாகும்.இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ‘ரெப்போ’ விகிதத்தை குறைத்து, வங்கிகளின் நிதிப் புழக்கத்தை அதிகரிக்க எடுத்துள்ள நடவடிக்கைகளால், பொருளாதாரம் வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் நேற்று, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சற்று குறைந்திருக்கும் என, தெரிகிறது. தனியார் நுகர்வு குறைந்துள்ளதாலும், நிலையான முதலீடுகள் சிறிதளவே உயர்ந்து உள்ளதாலும், ஏற்றுமதி வளர்ச்சி ஏற்ற, இறக்கமின்றி இருந்ததாலும், பொருளாதார வளர்ச்சி, சிறிது குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


இருந்தபோதிலும், வேகமான பொருளாதார வளர்ச்சியில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வரும் ஆண்டுகளில், இவ்வளர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கும்.வேளாண் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு, ஜன., – மார்ச் காலாண்டில், அன்னிய செலாவணியின் அசல் பரிவர்த்தனை விகிதம் உயர்ந்துள்ளது. இதே காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் குறைந்துள்ளது. இது, வளர்ச்சியின் சரிவை தடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)