பதிவு செய்த நாள்
04 மே2019
00:02
புதுடில்லி:கடந்த, 2018- – 19ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதாக தெரிகிறது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தாண்டு பிப்ரவரியில், மத்திய புள்ளியியல் அலுவலகம், கடந்த நிதியாண்டின், பொருளாதார வளர்ச்சியை, 7.2 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக குறைத்து, மறு மதிப்பீடு செய்திருந்தது.
இது, ஐந்தாண்டுகளில் இல்லாத சரிவாகும்.இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ‘ரெப்போ’ விகிதத்தை குறைத்து, வங்கிகளின் நிதிப் புழக்கத்தை அதிகரிக்க எடுத்துள்ள நடவடிக்கைகளால், பொருளாதாரம் வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சற்று குறைந்திருக்கும் என, தெரிகிறது. தனியார் நுகர்வு குறைந்துள்ளதாலும், நிலையான முதலீடுகள் சிறிதளவே உயர்ந்து உள்ளதாலும், ஏற்றுமதி வளர்ச்சி ஏற்ற, இறக்கமின்றி இருந்ததாலும், பொருளாதார வளர்ச்சி, சிறிது குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும், வேகமான பொருளாதார வளர்ச்சியில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வரும் ஆண்டுகளில், இவ்வளர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கும்.வேளாண் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு, ஜன., – மார்ச் காலாண்டில், அன்னிய செலாவணியின் அசல் பரிவர்த்தனை விகிதம் உயர்ந்துள்ளது. இதே காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் குறைந்துள்ளது. இது, வளர்ச்சியின் சரிவை தடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|