பதிவு செய்த நாள்
04 மே2019
00:05
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள், சரக்கு லாரிகளை நிறுத்தி, பில் மற்றும் ‘இ – வே’ பில் இல்லாதது தொடர்பான விசாரணை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; தொழில்நுட்பம் சார்ந்த சிறிய தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்லவும், மாநிலத்துக்கு உள்ளே, சரக்குகளை எடுத்துச் செல்லவும், இ – வே பில் பெறும் முறை, கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், எடுத்துச் செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும், இ – வே பில் கட்டாயம் பெற வேண்டும். சரக்கு வாகனங்களை சோதனை செய்யும் பணியை, வணிக வரித் துறையில் உள்ள ரோந்து குழுக்கள் மேற்கொள்கின்றன.
இந்நிலையில், சிறிய தவறுகளுக்காக வாகனத்தை பறிமுதல் செய்தல் போன்ற துன்புறுத்தலில் ஈடுபடக் கூடாது என, ரோந்து அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:சரக்கு ஏற்றி வரும் வாகனங்களில், சரக்குகளுக்கான உரிய பில் மற்றும் இ – வே பில் இல்லையெனில், சரக்கு மதிப்பிற்கேற்றவாறு வரி மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியிலான சிறிய தவறுகளுடன் சிக்கும் வாகனங்களின் மீது, கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளக் கூடாது.அதற்கான குறைந்த அபராதம் மட்டும் விதிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சோதனை மேற்கொள்ள வேண்டும்; அதே நேரம் துன்புறுத்தல் செய்யக் கூடாது என்பதற்காக, இத்தகைய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|