பொருளாதார வளர்ச்சி குறைவு? மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை பொருளாதார வளர்ச்சி குறைவு? மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ...  லண்டனில் குவியும் இந்தியர்கள் முதலீடு:ஓராண்டில், 255 சதவீதம் அதிகரித்து, புதிய சாதனை லண்டனில் குவியும் இந்தியர்கள் முதலீடு:ஓராண்டில், 255 சதவீதம் அதிகரித்து, ... ...
‘இ – வே’ பில்: கிடுக்கிப்பிடி சோதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2019
00:05

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள், சரக்கு லாரிகளை நிறுத்தி, பில் மற்றும் ‘இ – வே’ பில் இல்லாதது தொடர்பான விசாரணை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; தொழில்நுட்பம் சார்ந்த சிறிய தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்லவும், மாநிலத்துக்கு உள்ளே, சரக்குகளை எடுத்துச் செல்லவும், இ – வே பில் பெறும் முறை, கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், எடுத்துச் செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும், இ – வே பில் கட்டாயம் பெற வேண்டும். சரக்கு வாகனங்களை சோதனை செய்யும் பணியை, வணிக வரித் துறையில் உள்ள ரோந்து குழுக்கள் மேற்கொள்கின்றன.


இந்நிலையில், சிறிய தவறுகளுக்காக வாகனத்தை பறிமுதல் செய்தல் போன்ற துன்புறுத்தலில் ஈடுபடக் கூடாது என, ரோந்து அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:சரக்கு ஏற்றி வரும் வாகனங்களில், சரக்குகளுக்கான உரிய பில் மற்றும் இ – வே பில் இல்லையெனில், சரக்கு மதிப்பிற்கேற்றவாறு வரி மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.


தொழில்நுட்ப ரீதியிலான சிறிய தவறுகளுடன் சிக்கும் வாகனங்களின் மீது, கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளக் கூடாது.அதற்கான குறைந்த அபராதம் மட்டும் விதிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சோதனை மேற்கொள்ள வேண்டும்; அதே நேரம் துன்புறுத்தல் செய்யக் கூடாது என்பதற்காக, இத்தகைய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)