பதிவு செய்த நாள்
04 மே2019
23:29
மும்பை:‘கடந்த, 2014 முதல் இதுவரை, இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தங்கம் எதுவும் அனுப்பவில்லை’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் ரகசியமாக, சுவிட்சர்லாந்துக்கு, 200 டன் தங்கம் அனுப்பியதா?’ என, காங்கிரஸ் கட்சி, ‘டுவிட்டரில்’ கேள்வி எழுப்பியிருந்தது.இதையடுத்து, பல்வேறு ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது:
உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள், அவற்றிடம் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை, பேங்க் ஆப் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளின் மத்திய வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பது வழக்கமான நடைமுறை.ஆனால், ரிசர்வ் வங்கி, 2014 அல்லது அதற்கு பிந்தைய ஆண்டு களில், எந்தவொரு தங்கத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை. இது குறித்து, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|