பதிவு செய்த நாள்
07 மே2019
00:19
புதுடில்லி:கடந்த ஏப்ரலில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு தொய்வடைந்துள்ளது.‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த ஏப்ரலில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 51 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது.இது, மார்ச்சில், 52; பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது. ஏப்ரலில் சேவைகள் துறையின் வளர்ச்சி, ஏழு மாதங்கள் காணாத சரிவை சந்தித்துள்ளது.எனினும், 50க்கும் மேற்பட்ட புள்ளிகள், வளர்ச்சியை குறிப்பதால், சேவைகள் துறை, தொடர்ந்து, 11 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் காரணமாக, சேவைகள் துறை வளர்ச்சி குறைந்துள்ளது. அத்துடன், சந்தையில் அதிகரித்துள்ள போட்டி, வாடிக்கையாளர்கள், ‘ஆன்லைன்’ வசதிக்கு மாறி வருவது போன்ற காரணங்களால், சேவைகள் துறை வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இந்தாண்டு, மார்ச்சை விட, ஏப்ரலில், நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’கள் சற்று அதிகரித்துள்ளன.
இதனால், நிறுவனங்கள் பணிக்கு அமர்த்திய ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஏப்ரலில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.சி., – பி.எம்.ஐ.ஓ., குறியீடு, 51.7 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, மார்ச்சில், 52.7; பிப்ரவரியில், 53.8 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|