பதிவு செய்த நாள்
07 மே2019
00:20
திருப்பூர்:திருப்பூர், பழங்கரையில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும், 15ல் துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது.கடந்த நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடைகள், திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன. இலக்கை உயர்த்த, சர்வதேச பின்னலாடை கண்காட்சிகள், இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது நடத்தப்பட உள்ள, 46வது கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர்.இதன் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, ‘ஆர்டர்’களை பெற முடியும் என்ற எதிர்பார்ப்பில், ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
கண்காட்சியை, மத்திய கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர், குமார் ஜெயந்த் துவக்கி வைக்கிறார்.இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கத் தலைவர் சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர், மாகு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|