பதிவு செய்த நாள்
08 மே2019
00:27
புதுடில்லி: பிரிட்டானியா நிறுவனம், அதன் நிறுவனரும், இயக்குனருமான, நெஸ் வாடியா கைதான விபரத்தை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தது அப்பட்டமான விதிமீறல்’ என, ஆலோசனை நிறுவனமான, ‘இன்கவர்ன்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இன்கவர்ன் நிறுவனர், ஸ்ரீராம் சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த மார்ச்சில், ஜப்பானில், போதை மருந்து வைத்திருந்ததாக, நெஸ் வாடியா கைது செய்யப்பட்டார். அதில், நெஸ் வாடியாவுக்கு, ஐந்தாண்டு காலம் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விபரத்தை, பிரிட்டானியா, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் வெளியே தெரிந்த பின், பிரிட்டானியா, கடந்த, 2ம் தேதி, பங்குச் சந்தைகளுக்கு அளித்த அறிக்கையில், வாடியா கைது விபரம் தெரியாது என்றும், தற்போது தான் தெரிய வந்தது எனவும் கூறியுள்ளது.பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும், அதன் அனைத்து செயல்பாடுகள், முறைகேடுகள், நிறுவனர்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட விபரங்களை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
பிரிட்டானியா அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. இது, பங்குச் சந்தை விதிகளை மீறிய செயலாகும்.மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சீரிய நிர்வாகம் மற்றும் பண்புகளின் நலனை கருத்தில் கொண்டு, பிரிட்டானியா இயக்குனர் குழு, நெஸ் வாடியா போன்ற இயக்குனரால், நிறுவனத்திற்கு நன்மையா என, தங்களுக்குள் கேள்வி எழுப்ப வேண்டும்.
நெஸ் வாடியாவை, இயக்குனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நெஸ் வாடியா எழுதிய கடிதத்தை, பிரிட்டானியா, மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ளது.அதில், தான், சந்தேகத்தின் பேரிலான போதை மருந்து வழக்கில், கண்காணிப்பு தண்டனை பெற்றதாகவும், சிறைத் தண்டனை அல்ல என தெரிவித்துள்ள வாடியா, தற்போது இந்தியாவில், வழக்கம் போல நிறுவனப் பணிகளை கவனித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|