வரி குறைப்பு தேவை அமெரிக்கா வலியுறுத்தல் வரி குறைப்பு தேவை அமெரிக்கா வலியுறுத்தல் ...  ‘ஜெட் ஏர்வேசுக்கு ரூ.250 கோடி தர தயார்!’ ‘ஜெட் ஏர்வேசுக்கு ரூ.250 கோடி தர தயார்!’ ...
பிரிட்டானியா நிறுவனம் பங்கு சந்தை விதிமீறல்:வாடியா கைதானதை மறைத்ததாக குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2019
00:27

புதுடில்லி: பிரிட்டானியா நிறுவனம், அதன் நிறுவனரும், இயக்குனருமான, நெஸ் வாடியா கைதான விபரத்தை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தது அப்பட்டமான விதிமீறல்’ என, ஆலோசனை நிறுவனமான, ‘இன்கவர்ன்’ தெரிவித்துள்ளது.



இது குறித்து, இன்கவர்ன் நிறுவனர், ஸ்ரீராம் சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த மார்ச்சில், ஜப்பானில், போதை மருந்து வைத்திருந்ததாக, நெஸ் வாடியா கைது செய்யப்பட்டார். அதில், நெஸ் வாடியாவுக்கு, ஐந்தாண்டு காலம் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விபரத்தை, பிரிட்டானியா, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்கவில்லை.




இந்த விவகாரம் வெளியே தெரிந்த பின், பிரிட்டானியா, கடந்த, 2ம் தேதி, பங்குச் சந்தைகளுக்கு அளித்த அறிக்கையில், வாடியா கைது விபரம் தெரியாது என்றும், தற்போது தான் தெரிய வந்தது எனவும் கூறியுள்ளது.பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும், அதன் அனைத்து செயல்பாடுகள், முறைகேடுகள், நிறுவனர்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட விபரங்களை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்.



பிரிட்டானியா அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. இது, பங்குச் சந்தை விதிகளை மீறிய செயலாகும்.மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சீரிய நிர்வாகம் மற்றும் பண்புகளின் நலனை கருத்தில் கொண்டு, பிரிட்டானியா இயக்குனர் குழு, நெஸ் வாடியா போன்ற இயக்குனரால், நிறுவனத்திற்கு நன்மையா என, தங்களுக்குள் கேள்வி எழுப்ப வேண்டும்.
நெஸ் வாடியாவை, இயக்குனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இதனிடையே, நெஸ் வாடியா எழுதிய கடிதத்தை, பிரிட்டானியா, மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ளது.அதில், தான், சந்தேகத்தின் பேரிலான போதை மருந்து வழக்கில், கண்காணிப்பு தண்டனை பெற்றதாகவும், சிறைத் தண்டனை அல்ல என தெரிவித்துள்ள வாடியா, தற்போது இந்தியாவில், வழக்கம் போல நிறுவனப் பணிகளை கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)