பதிவு செய்த நாள்
09 மே2019
23:48
புதுடில்லி:ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னராக பொறுப்பேற்க உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
பிரிட்டனின் மத்திய வங்கியாக, பேங்க் ஆப் இங்கிலாந்து உள்ளது. இதன் கவர்னராக, கனடாவைச் சேர்ந்த, கார்னி உள்ளார். இவரின் பதவிக் காலம், 2020, ஜன., 31ல் முடிவடைய உள்ளது.இதையடுத்து, புதிய கவர்னரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இப்போட்டியில், ரகுராம் ராஜன், முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, ரகுராம் ராஜன், 2003- – 06 வரை, பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் ஆய்வுப் பிரிவு இயக்குனராக பதவி வகித்தார். கடந்த, 2007ல் ஏற்பட்ட, சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து, முன்கூட்டியே எச்சரித்தவர்.ரிசர்வ் வங்கியின், 23வது கவர்னராக, 2013 செப்., – 2016 செப்., வரை பதவி வகித்தார்.
தற்போது, அமெரிக்காவின் சிகாகோ பல்கலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர், பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக, கடந்த ஆண்டு, தகவல் வெளியானது. அப்போது, அதை மறுத்த ரகுராம் ராஜன், தற்போதைய பேராசிரியர் பணியில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|