பதிவு செய்த நாள்
09 மே2019
23:51
புதுடில்லி:‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், கடந்த ஏப்ரலில், வாகன தயாரிப்பை, 10 சதவீதம் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தேவை குறைந்துள்ளதால், கடந்த சில மாதங்களாக, வாகனத் துறை மந்த நிலையில் உள்ளது.முன்னணி நிறுவனங்களின், வாகன விற்பனை வளர்ச்சியில், தொய்வு ஏற்பட்டுள்ளது.இதற்கு, நாட்டின் வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள, மாருதி சுசூகி இந்தியா நிறுவனமும் விதிவிலக்கல்ல.
இந்நிறுவனம், பிப்ரவரி, மார்ச்சை தொடர்ந்து, ஏப்ரல் மாதத்திலும், வாகன தயாரிப்பை, 10 சதவீதம் குறைத்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஏப்ரலில், ‘சூப்பர் கேரி’ இலகு ரக வர்த்தக வாகனம் உட்பட, மொத்த வாகன தயாரிப்பு, 9.6 சதவீதம் குறைந்து, 1.48 லட்சமாக சரிவடைந்துஉள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1.63 லட்சமாக இருந்தது.
இதே காலத்தில், ‘ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர்’ கார்கள் தயாரிப்பு, 10.3 சதவீதம் குறைந்து, 1.61 லட்சத்திலிருந்து, 1. 45 லட்சமாக சரிவடைந்து உள்ளது.‘காம்பேக்ட்’ கார் தயாரிப்பு, 11.4 சதவீதம் குறைந்து, 1.20 லட்சத்திலிருந்து, 1.06 லட்சமாக குறைந்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், பன்முக பயன்பாட்டு வாகன தயாரிப்பு, 8.4 சதவீதம் உயர்ந்து, 22 ஆயிரத்து, 607ல் இருந்து, 24 ஆயிரத்து, 516 ஆக அதிகரித்துள்ளது.‘வேன்’ பிரிவின் தயாரிப்பு, 25.8 சதவீதம் குறைந்து, 14 ஆயிரத்து, 407ல் இருந்து, 10 ஆயிரத்து, 688 ஆக சரிவடைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், கூர்கான் மற்றும் மானேசர் தொழிற்சாலைகளின் வாகன தயாரிப்பு திறன், ஆண்டுக்கு, 15.5 லட்சமாகும்.சுசூகி நிறுவனத்தின், குஜராத் மாநிலம், ஹன்சல்புர் தொழிற்சாலையின் முதல் பிரிவு, ஆண்டுக்கு, 2.5 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|