தொழில் துறை உற்பத்தி சரிவு 11 துறைகளில் முன்னேற்றம் தொழில் துறை உற்பத்தி சரிவு 11 துறைகளில் முன்னேற்றம் ...  சீன பொருட்களுக்கு மீண்டும் வரி உயர்வு சமரச பேச்சு முறிவால் அமெரிக்கா அதிரடி சீன பொருட்களுக்கு மீண்டும் வரி உயர்வு சமரச பேச்சு முறிவால் அமெரிக்கா ... ...
ஐ.டி.சி., நிறுவன தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் மரணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2019
23:43

புதுடில்லி:சிகரெட் முதல், ஓட்டல் வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர், ஒய்.சி.தேவேஷ்வர், 72, நேற்று காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


கடந்த, 1968ல், ஐ.டி.சி.,யில் சேர்ந்த தேவேஷ்வர், 1984ல், அந்நிறுவன இயக்குனராகவும், 1996ல், தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவராகவும் உயர்ந்தார்.சிகரெட் தொழிலில் மட்டும் ஈடுபட்டிருந்த நிறுவனத்தை, நுகர்பொருள், காகிதம், ஓட்டல், வேளாண் பொருட்கள் என, பல துறைகளில் களமிறக்கி வெற்றி கண்ட பெருமை, தேவேஷ்வரையே சாரும்.அவர், தலைமை பொறுப்பை ஏற்றபோது, ஐ.டி.சி., நிறுவனத்தின் வருவாய், 5,200 கோடி ரூபாய்; மொத்த லாபம், 452 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.



இந்த வருவாய், 2017- – 18ம் நிதியாண்டில், 44 ஆயிரம் கோடி ரூபாய்; நிகர லாபம், 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஐ.டி.சி., 2017ல், செயல் தலைவர் பதவியை, தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என, பிரித்தது. அது முதல், செயல் சாரா தலைவராக, நிறுவனத்தின் ஆலோசகராக, தேவேஷ்வர் செயல்பட்டு வந்தார்.‘பத்மபூஷண்’ உள்ளிட்ட பல விருதுகளுடன், பல்வேறு அமைப்புகளின் தலைமை பொறுப்பு வகித்தவர். ‘‘அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது,’’ என, ஐ.டி.சி., தலைமை செயல் அதிகாரி, சஞ்சீவ் புரி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)