பதிவு செய்த நாள்
12 மே2019
23:51
ஏ.டி.எம்.,
இயந்திரத்தை பயன்படுத்தும் போது, பரிவர்த்தனை தோல்வியில் முடிந்த
நிலையிலும், கணக்கில் பணம் கழிக்கப்படுவது, பரவலாக பயனாளிகள் பலரும் எதிர்கொள்ளும்
பிரச்னையாக இருக்கிறது.
வாடிக்கையாளர்
எந்த வங்கி ஏ.டி.எம்., அல்லது வேறு எந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை
பயன்படுத்தினாலும் சரி, பரிவர்த்தனை தோல்வியில் முடிந்து,
கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டால், இது தொடர்பான கார்டு
வினியோகம் செய்த வங்கியில் புகார் செய்ய வேண்டும்.
இதற்காக,
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் தொலைபேசி எண்கள், ஏ.டி.எம்.,
இயந்திர மையத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மற்ற,
ஏ.டி.எம்.,- களிலும் உதவி எண்கள்
குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பொதுவாக, ஏ.டி.எம்., இயந்திரத்தில்
பரிவர்த்தனை தோல்வி அடைந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக புகார்
அளிக்கப்பட்டால், புகார் பெற்ற ஏழு நாட்களுக்குள், பிடித்தம் செய்த
தொகையை வாடிக்கையாளர் கணக்கில் திரும்பசெலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு
செய்யத்தவறினால், ஏழு நாட்களுக்குப்பிறகு வங்கி, அதன் பிறகான
தாமதத்திற்கு ஒவ்வொரு நாளும், 100 ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என,
ரிசர்வ் வங்கி விதிமுறை உள்ளது.நஷ்ட ஈட்டை பெற, வாடிக்கையாளர் பரிவர்த்தனை செய்த, 30 நாட்களுக்குள் எழுத்து வடிவில் புகார் அளிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|