பதிவு செய்த நாள்
14 மே2019
00:57
புதுடில்லி:முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த, ஐந்து துணை நிறுவனங்களின் பதிவு அலுவலகங்கள், மும்பையில் இருந்து, குஜராத் தலைநகர், ஆமதாபாதிற்கு மாற்றப்பட்டு உள்ளன.குஜராத், ஜாம் நகரில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பிரமாண்ட, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.
இத்துடன், ஒரு சில துணை நிறுவனங்களின் பதிவு அலுவலகங்கள், ஆமதாபாதில் உள்ளன.துணை நிறுவனங்கள்எனினும், பெரும்பாலான துணை நிறுவனங்கள், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐந்து துணை நிறுவனங்களின் பதிவு அலுவலகங்கள், ஆமதாபாதிற்கு மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்து, ரிலையன்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரிலையன்சின் வேர், குஜராத் மாநிலம்; அங்கிருந்து தான், நிறுவனத்தின் வளர்ச்சி துவங்கியது. அதனால், அம்மாநிலத்திற்கு பிரதியுபகாரமாக, ஏதாவது செய்ய விரும்பினோம்.இதையொட்டி, தொலை தொடர்பு துறையைச் சேர்ந்த, நான்கு நிறுவனங்கள் மற்றும் ஒரு முதலீட்டு நிறுவனத்தின் பதிவு அலுவலகங்களை, குஜராத்திற்கு மாற்றிஉள்ளோம்.இதன்படி, ‘ரிலையன்ஸ் ஜியோ மெசேஜிங் சர்வீசஸ், ரிலையன்ஸ் ஜியோ இன்ப்ராடெல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்டு ஹோல்டிங்ஸ்’ நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், ஆமதாபாதிற்கு மாற்றப்பட்டுள்ளன.
நடவடிக்கைகடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இப்பணிக்கு, மும்பை நிறுவன பதிவாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.ரிலையன்ஸ் குழுமம், ஓராண்டில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களின் வர்த்தக விரிவாக்கத்திற்காக, 30க்கும் அதிகமான நிறுவனங்களுடன், கையகப்படுத்துதல் மற்றும் கூட்டு நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|