பதிவு செய்த நாள்
14 மே2019
11:00
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 61.88 புள்ளிகள் சரிந்து 37,028ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 18.45 புள்ளிகள் சரிந்து 11,129.75ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
கடந்த இரண்டரை மாதங்களுக்கு பிறகு ரூபாயின் மதிப்பு நேற்று 59 காசுகள் சரிந்து ரூ.70.51ஆக இருந்த நிலையில், இன்று சிறு உயர்வுடன் துவங்கி உள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.70.42-ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|