பதிவு செய்த நாள்
14 மே2019
23:51
புதுடில்லி:கடந்த ஏப்ரலில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 3.07 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, மார்ச்சில், 3.18 சதவீதம்; 2018, ஏப்ரலில், 3.62 சதவீதமாக இருந்தது.
காய்கறிகள் விலை உயர்ந்த போதிலும், எரிபொருள், தயாரிப்பு பொருட்கள் விலை குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் சரிவடைந்துள்ளது.கடந்த ஏப்ரலில், காய்கறிகள் பிரிவின் மொத்த விலை பணவீக்கம், 40.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மார்ச்சில், 28.13 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 5.68 சதவீதத்தில் இருந்து, 7.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் பிரிவின் பணவீக்கம், 5.41 சதவீதத்தில் இருந்து, 3.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே காலத்தில், தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம், 2.16 சதவீதத்தில் இருந்து, 1.72 சதவீதமாக சரிவடைந்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, நிதிக் கொள்கையை வெளியிடுகிறது.
காய்கறிகள், மாமிசம், மீன், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை உயர்வால், ஏப்ரலில், சில்லரை விலை பணவீக்கம், 2.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஆறு மாதங்களில் இல்லாத உயர்வாகும்.வழக்கமான மழை பொழிவு இருக்கும் என்ற கணிப்பால், ‘நடப்பு, 2019- – 20ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான முதல் அரையாண்டில், சில்லரை பணவீக்கம், 2.9 – 3 சதவீதமாக இருக்கும்’ என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
இது, முழு நிதியாண்டிற்கு, 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டம், ஜூன், 4, 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளதால், இக்கூட்டத்தில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|