பதிவு செய்த நாள்
14 மே2019
23:53
புதுடில்லி:மத்திய புள்ளியியல் அமைச்சகம், சி.எஸ்.சி., ‘இ – கவர்னன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘மொபைல் ஆப்’ வாயிலாக, ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
இது குறித்து, சி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு, மொபைல் போன் ஆப் மூலம் நடைபெறும். கணக்கெடுப்பு விபரங்களின் தரத்தை உறுதி செய்ய, இரு கட்ட கண்காணிப்பு நடைமுறை மேற்கொள்ளப்படும்.இந்த கணக்கெடுப்பு மூலம், நாட்டில் நடைபெறும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும், வர்த்தகங்கள் மற்றும் அவற்றின் உரிமை தொடர்பான விபரங்களையும் அறியலாம்.
இந்த கணக்கெடுப்பு பணி, ஜூன், 1ல் துவங்கி, மூன்று மாதங்களில் முடிவடையும்.இதற்காக, 6,000த்திற்கும் அதிகமான பயிற்சிப் பட்டறைகளில், நிறுவன முகவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். முதலில், மத்திய பிரதேசத்தில் துவங்கி, பிற மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இத்துடன், ஒரு பகுதியின் பொருளாதார சூழல் குறித்து துல்லியமாக அறிய, ‘புவி விபரம்’ திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். கணக்கெடுக்கும் பணியில், ஒன்பது லட்சம் முகவர்கள் மற்றும் மூன்று லட்சம் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுவர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|