பதிவு செய்த நாள்
14 மே2019
23:55
சென்னை:‘‘ராணுவ தொழில் வழித்தடம், கட்டமைப்பு, துறைமுகங்கள் போன்ற துறைகளின் வாயிலாக, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய எதிர்காலம் இருக்கிறது,’’ என, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர், சஞ்சய் ஜெயவர்தனவேலு தெரிவித்தார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகம், பொருளாதார பங்களிப்பில், இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது.வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பான நிலையில் இருக்கிறோம்.தற்போது, ராணுவ தொழில் வழித்தடம், கட்டமைப்பு, துறைமுகங்கள், சரக்கு போக்கு வரத்து போன்ற துறைகளில், பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
தொழில்துறை வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் வைத்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலம் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த உள்ளது.இதில், எளிதில் வணிகம் செய்தல், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் துவங்குதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.
தென்மண்டலம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை கருத்தில் வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|