பதிவு செய்த நாள்
15 மே2019
10:47
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழல் நிலவுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 15ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.07 புள்ளிகள் உயர்ந்து 37,416.60ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 21.65 புள்ளிகள் உயர்ந்து 11,243.70ஆகவும் வர்த்தகமாகின. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 221 புள்ளிகளும், நிப்டி 61 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் நீடித்த நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் மந்தமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் தேவைப்படும் நேரத்தில் சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக விஷயத்தில் சுமூகமான சூழல் உருவாகி இருப்பதாக தெரிகிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தைகள் நேற்று மாலை முதலே ஏற்றமான சூழல் நிலவியது. அது இன்றும் தொடர்வதால் இன்றைய வர்த்தகமும் உயர்வுடன் காணப்படுகின்றன. மேலும் ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் இருப்பதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.70.21ஆக இருந்தது. அமெரிக்கா - சீன இடையே சுமூகமான சூழல் உருவாததால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக தெரிவிக்கிறார்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|