பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழல்பங்குச்சந்தைகளில் ஏற்றமான சூழல் ... மதுரையில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மதுரையில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி ...
வருகிறது, ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’:மத்திய அரசின் புதிய தகவல் சேமிப்பு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
23:43

புதுடில்லி:இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மருத்துவ விபரங்களையும், மின்னணு முறையில் சேமிக்கும், ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’ திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது, பான், ஆதார், ஓட்டுனர் உரிமம், மாணவர்களின் மதிப்பெண் போன்ற முக்கிய ஆவணங்களை, மின்னணு தொழில்நுட்பத்தில் பாதுகாக்க, ‘டிஜி லாக்கர்’ என்ற மொபைல் போன், ‘ஆப்’ஐ, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதன் மூலம், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், மொபைல் போன் வாயிலாக, தேவையான ஆவணங்களை பார்க்கலாம்.


பரிந்துரை

போக்குவரத்து போலீசாரிடம், ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவும், ரயில் பயணத்தில், பரிசோதகரிடம், ஆதார் விபரத்தை வழங்கவும், டிஜி லாக்கர் பெரிதும் உதவுகிறது.அதுபோல, மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு குறித்த விபரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க, ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’ என்ற மொபைல் போன் ஆப் வெளியிட, மத்திய சுகாதர அமைச்சகத்திற்கு, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.


அத்துடன், இந்த லாக்கரை பயன்படுத்த, ஒவ்வொருவருக்கும், பி.எச்.ஐ., என்ற தனிநபர் சுகாதார அடையாள எண் மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்க வேண்டும் எனவும், தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம், ஒவ்வொருவரும், தங்களின் அனைத்து மருத்துவ சிகிச்சை விபரங்கள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை, இந்த லாக்கரில் சேமிக்கலாம்.


பல்வேறு அறிக்கை


எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதை பயன்படுத்தலாம்.மருத்துவ சிகிச்சை தொடர்பான பல்வேறு அறிக்கைகளை, மருத்துவருக்கு வழங்கத் தேவையின்றி, அவரது மொபைல் போனுக்கு டிஜிட்டல் ஆவணங்களாக சுலபமாக அனுப்பலாம்.இந்த வசதியை, அனைத்து மக்களும் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உள்ளது.

தற்போது, மக்களின் சுகாதார தகவல்களை பாதுகாக்க, கடுமையான சட்டம் எதுவும் இல்லை. எனினும், இது தொடர்பான மசோதா உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)