பதிவு செய்த நாள்
15 மே2019
23:43
புதுடில்லி:இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மருத்துவ விபரங்களையும், மின்னணு முறையில் சேமிக்கும், ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’ திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது, பான், ஆதார், ஓட்டுனர் உரிமம், மாணவர்களின் மதிப்பெண் போன்ற முக்கிய ஆவணங்களை, மின்னணு தொழில்நுட்பத்தில் பாதுகாக்க, ‘டிஜி லாக்கர்’ என்ற மொபைல் போன், ‘ஆப்’ஐ, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதன் மூலம், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், மொபைல் போன் வாயிலாக, தேவையான ஆவணங்களை பார்க்கலாம்.
பரிந்துரை
போக்குவரத்து போலீசாரிடம், ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவும், ரயில் பயணத்தில், பரிசோதகரிடம், ஆதார் விபரத்தை வழங்கவும், டிஜி லாக்கர் பெரிதும் உதவுகிறது.அதுபோல, மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு குறித்த விபரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க, ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’ என்ற மொபைல் போன் ஆப் வெளியிட, மத்திய சுகாதர அமைச்சகத்திற்கு, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், இந்த லாக்கரை பயன்படுத்த, ஒவ்வொருவருக்கும், பி.எச்.ஐ., என்ற தனிநபர் சுகாதார அடையாள எண் மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்க வேண்டும் எனவும், தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம், ஒவ்வொருவரும், தங்களின் அனைத்து மருத்துவ சிகிச்சை விபரங்கள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை, இந்த லாக்கரில் சேமிக்கலாம்.
பல்வேறு அறிக்கை
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதை பயன்படுத்தலாம்.மருத்துவ சிகிச்சை தொடர்பான பல்வேறு அறிக்கைகளை, மருத்துவருக்கு வழங்கத் தேவையின்றி, அவரது மொபைல் போனுக்கு டிஜிட்டல் ஆவணங்களாக சுலபமாக அனுப்பலாம்.இந்த வசதியை, அனைத்து மக்களும் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உள்ளது.
தற்போது, மக்களின் சுகாதார தகவல்களை பாதுகாக்க, கடுமையான சட்டம் எதுவும் இல்லை. எனினும், இது தொடர்பான மசோதா உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|