பதிவு செய்த நாள்
15 மே2019
23:56
சென்னை:எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஐந்து நாட்கள் மதுரையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ், எம்.எஸ்.எம்.இ., தொழில் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.தற்போது, நிறுவனத்தின் மதுரை விரிவாக்கம் சார்பில், வரும், 20 முதல் 24ம் தேதி வரை, மதுரையில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற இருக்கிறது.
சுற்றுச்சூழலை பாதிக்காத பைகள், காகிதம் உட்பட, பல்வேறு தயாரிப்புகள் குறித்த பயிற்சிகள், செய்முறை வாயிலாக வழங்கப்பட உள்ளன.படித்த வேலையில்லா இளைஞர்கள், இந்த
பயிற்சிகளை பெறலாம்.பயிற்சியில் சேர விருப்பமுள்ள, 18 வயது நிரம்பியோர், 20ம் தேதி காலை, 9:30 மணியளவில், எம்.எஸ்.எம்.இ., திறன் பயிற்சி மையம், சிட்கோ தொழிற்பேட்டை, மேலுார் சாலை, கே.புதுார், மதுரை – 7 என்ற முகவரிக்கு, ஆதார் அட்டை மற்றும் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 95519 50555, 90476 13573 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|