பதிவு செய்த நாள்
17 மே2019
04:02
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்ரலில், 0.64 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதற்கு, பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி குறைந்ததே காரணம்.
கடந்த ஏப்ரலில், 2,600 கோடி டாலர் மதிப்பிற்கு, ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இதே மாதத்தில், இறக்குமதி, 4,140 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால், ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப்பற்றாக்குறை, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 1,533 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த, 2018, நவம்பருக்குப் பின், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே ஆண்டு, டிசம்பரில், இறக்குமதி, 0.34 சதவீதமாக குறைந்து இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 9.26 சதவீதம் அதிகரித்து, 1,138 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எண்ணெய் சாரா பொருட்கள் இறக்குமதி, 2.78 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி, 54 சதவீதம் உயர்ந்து, 397 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்கள், கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள், மருந்துகள் ஆகிவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால், ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
கடந்த, மார்ச்சில், சேவைகள் ஏற்றுமதி, 6.6 சதவீதம் உயர்ந்து, 1,794 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இறக்குமதி, 10.55 சதவீதம் வளர்ச்சி கண்டு,1,137 கோடி டாலராக அதிகரித்துள்ளது.சேவைகள் துறையின் வர்த்தகப் பற்றாக்குறை,658 கோடி டாலராக உள்ளது.ரிசர்வ் வங்கி அறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|