பதிவு செய்த நாள்
18 மே2019
06:15
சென்னை: ‘‘சிட்டி யூனியன் வங்கியின், 2018 – 19ம் நிதியாண்டின் நிகர லாபம், 15 சதவீதம் உயர்ந்து, 175 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின் நிர்வாக இயக்குனர், என்.காமகோடி தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், 17 சதவீதம் உயர்ந்து, 75 ஆயிரத்து, 513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2017 – 18ம் நிதியாண்டில், 61 ஆயிரத்து, 91 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் வைப்பு தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 38 ஆயிரத்து, 448 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 32 ஆயிரத்து, 853 கோடி ரூபாயாக இருந்தது.
இதே போன்று, வங்கி வழங்கிய கடன் தொகை, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33 ஆயிரத்து, 65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 28 ஆயிரத்து, 238 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர வட்டி வருவாய், 1,430 கோடியிலிருந்து, 1,611 கோடி ரூபாயாக அதிகரித்து, 13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிகர லாபம், 592 கோடியிலிருந்து, 683 கோடி ரூபாயாக அதிகரித்து, 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.காசா எனும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்பு தொகை, 7,957 கோடியிலிருந்து, 9,698 கோடி ரூபாயாக அதிகரித்து, 22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்த வாராக் கடன், 3.03 சதவீதத்திலிருந்து, 2.95 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 – 19ல், 50 கிளைகளும், 64 ஏ.டி.எம்., மையங்களும் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 50 கிளைகளும், 100 ஏ.டி.எம்., மையங்களும் துவங்கப்படும். இதுவரை மொத்தம், 650 கிளைகளும், 1,685 ஏ.டி.எம்., மையங்களும் உள்ளன.இவ்வாறு, காமகோடி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|