பதிவு செய்த நாள்
18 மே2019
06:16
புதுடில்லி: மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, அனைத்து வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை, நுகர்வோரின் தரவுகளை பெறுவதற்கான கொள்கையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, ‘அமேசான், வால்மார்ட்’ போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே, தரவுகள் மூலம், நுகர்வோரின் பயன்பாடுகளை அறிந்து, அவற்றுக்கேற்ப வர்த்தக உத்திகளை செயல்படுத்துகின்றன.இனி, அனைத்து நிறுவனங்களுக்கும், நுகர்வோரின் தரவுகளை அறியும் வசதி கிடைக்கும்; இதற்கான கொள்கையை, ‘நிடி ஆயோக்’ உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், வங்கி, மின்னணு வர்த்தகம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கும், நுகர்வோர் தரவுகள் கிடைக்கும்.இதனால், ஒருவர் மேற்கொள்ளும் விற்பனை, கொள்முதல், கடன், மருத்துவ அறிக்கை, காப்பீடு, சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், நிறுவனங்கள் பெறலாம்; அதற்கேற்ப, வர்த்தகத்தை மேம்படுத்தலாம்.
அதேசமயம், நுகர்வோரின் தகவல் பாதுகாப்பிற்கும் புதிய கொள்கை வழிவகை செய்யும். நுகர்வோர் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, அவர் சார்ந்த விபரங்கள், தரவு தொகுப்பில் இடம் பெறும்.தரவு பாதுகாப்பு மற்றும் நடைமுறைகளை கண்காணிக்க, ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|