பதிவு செய்த நாள்
18 மே2019
23:39
சென்னை: டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம், அமெரிக்காவில் புதிய ஆலை ஒன்றை துவங்கியுள்ளது.சுந்தரம் கிளேட்டன் நிறுவனம், வெளிநாட்டில் அமைத்துள்ள முதல் ஆலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர், லட்சுமி வேணு கூறியுள்ளதாவது: அமெரிக்காவில், தெற்கு கரோலினாவில் உள்ள ரிட்ஜ்வில்லி தொழில் பூங்காவில், 50 ஏக்கர் பரப்பளவில், நிறுவனத்தின் புதிய வார்ப்பட ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, 630 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில், முதல் ஆண்டில், 1,000 டன் வார்ப்பட பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் இதுவே, 10 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்படும்.இரு சக்கர வாகனங்கள் துவங்கி, கனரக வாகனங்கள் வரை, அனைத்து வகையான வாகனங்களுக்கும் தேவைப்படும் உதிரி பாகங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, உலகளவிலான பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.குறிப்பாக இதன் மூலம், அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|