‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம் அமெரிக்காவில் முதல் ஆலை ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம் அமெரிக்காவில் முதல் ஆலை ... ராணுவம், ரயில்வேக்கு மாநிலங்கள் உதவணும் ராணுவம், ரயில்வேக்கு மாநிலங்கள் உதவணும் ...
மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
23:41

மும்பை: மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, அதன் பரிந்துரையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.


ரிசர்வ் வங்கி, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பரவலாக்கவும், பணப் பட்டுவாடா முறைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், இந்தாண்டு ஜனவரியில், உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது.ஐந்து உறுப்பினர்களை கொண்ட இக்குழுவின் தலைவராக, 'இன்போசிஸ்' துணை நிறுவனரும், 'ஆதார்' திட்ட வடிவமைப்பாளருமான, நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டார்.இக்குழு, வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து, மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கையை உருவாக்கியுள்ளது.


இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழு, பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கிஉள்ளது.அதில், தற்போதைய நடைமுறையில் உள்ள இடர்ப்பாடுகளை அகற்றி, பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மின்னணு பரிவர்த்தனைகளை பரவலாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து, நம் நாட்டிற்கு தேவையான, மிகச் சிறந்த அம்சங்களை தேர்வு செய்யும்.இந்த பரிந்துரைகள், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட, 'விஷன் 2021' கொள்கையில் சேர்க்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதனால், நாட்டின் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)