மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கைமின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை ... கருத்துகணிப்பால் உற்சாகம் : இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்வு கருத்துகணிப்பால் உற்சாகம் : இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்வு ...
ராணுவம், ரயில்வேக்கு மாநிலங்கள் உதவணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
23:43

புதுடில்லி: 'மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை துறைகளின் திட்டங்களுக்கு, மாநில அரசுகளும் நிதியுதவி வழங்க வேண்டும்' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.


டில்லியில், இந்திய வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, 'அசோசெம்' ஏற்பாடு செய்த கருத்தரங்கில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர், பிபேக் தெப்ராய் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:ஆரோக்கிய பராமரிப்பு, மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இருந்தபோதிலும், மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'பிரதான் மந்திரி ஜன் ஆயுஷ்மான் யோஜனா' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில், ஒரு குடும்பம், 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு பெறலாம். இதன் மூலம், 50 கோடி பேர் பயனடைவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் இத்திட்டம், மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.


முக்கியம்

அதுபோல, மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளில், மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும்.இத்துறைகளுக்கு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு, ராணுவத்தின் பங்கு மகத்தானது. ரயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும், நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையாக உள்ளன. அதனால், இந்த மூன்று துறைகளிலும், மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும்.


இந்தியாவில், அனைத்து துறைகளிலும், மத்திய அரசின் பங்கு, அளவிற்கு அதிகமாக உள்ளது. அதனால், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி மூலம் மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை கிடைக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதேசமயம், பொது நிர்வாகத்தின் பார்வையில், எந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்வதும் அவசியம்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான வரி வருவாய், 17 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக உள்ளது. நாம் எவ்வளவு காலத்திற்கு வரி விலக்குகளை வழங்குகிறோமோ, அதுவரை எளிமையான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவது சிரமம்.


இந்தியா போன்ற, மிகப் பெரிய நாட்டில், எந்த அளவிற்கு நிலம், தொழிலாளர் வளம், மூலதனம் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே, வளர்ச்சியும், உற்பத்தியும் இருக்கும்.பல மாநிலங்கள், இன்னும் அரதப் பழசான, நில உரிமை கணக்கெடுப்பு விபரங்களை வைத்துள்ளன. அவற்றை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, நில உரிமம் தொடர்பான துல்லியமான புள்ளிவிபரங்களை அறியாத வரை, நிலங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது மிகவும் சிரமம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)