நிதானமாக முடிவெடுக்கும் நேரமிது நிதானமாக முடிவெடுக்கும் நேரமிது ...  ‘ஆர்கானிக்’ விவசாயத்திற்கு சலுகை ‘ஆர்கானிக்’ விவசாயத்திற்கு சலுகை ...
இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
06:31

புதுடில்லி: ‘இந்திய குடும்பங்களில், தங்கம் கையிருப்பு, 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும்’ என, உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து, கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து, உலக தங்க கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்திய குடும்பங்களில், 23 ஆயிரம் – 24 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இது, தற்போதைய ஆய்வில், 24 ஆயிரம் – 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 760 டன்னாக இருந்தது. இது, இந்தாண்டு, 750 – 850 டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது; அத்துடன், தங்கம் விலையும் குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 5 சதவீதம் அதிகரித்து, 159 டன்னாக உயர்ந்துள்ளது.

அக் ஷய திருதியை மற்றும் திருமண சீசன் காரணமாக, நடப்பு, ஏப்., – ஜூன் காலாண்டிலும், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தாண்டு, பருவ மழை நன்கு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கிராமப்புற பொருளாதாரம் நன்கு இருக்கும் என்பதால், தங்கம் விற்பனை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு:
இந்திய குடும்பங்களில், தற்போது, 25 ஆயிரம் கோடி டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில், 608.80 டன், தங்கம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)