வரி சீர்திருத்தக் குழு பணிக் காலம் நீட்டிப்பு வரி சீர்திருத்தக் குழு பணிக் காலம் நீட்டிப்பு ...  கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம் கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம் ...
வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
01:49

புதுடில்லி: பொதுத் துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில், 1.20 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்துள்ளன. திவால் சட்ட நடவடிக்கைகளால், வாராக்கடன் வசூல், இரு மடங்கு உயர்ந்துள்ளது.


இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள், 1.80 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தன. ஆனால், திவால் சட்டத்தின் கீழ், எஸ்ஸார் ஸ்டீல் மற்றும் பூஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனங்களின் விற்பனை தொடர்பான பணிகள் முடியாமல் உள்ளதால், வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முடியவில்லை.


எனினும், நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனங்கள் விற்பனை மூலம், வங்கிகளுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த நிதியாண்டின், முதல் அரையாண்டில், பொதுத் துறை வங்கிகள், 60 ஆயிரத்து, 713 கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்துள்ளன. இது, முழு நிதியாண்டில், 1.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


முந்தைய, 2017 – -18ம் நிதியாண்டில், 74 ஆயிரத்து, 562 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டது. இதனுடன் ஒப்பிடும் போது, கடந்த நிதியாண்டில், வாராக்கடன் வசூல், இரு மடங்கை நெருங்கியுள்ளது.வங்கிகள், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மூலம், 55 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்து உள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனம்ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் நிதி நெருக்கடி அம்பலத்திற்கு வந்த பின், வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம், பணப் புழக்கம் குறைந்துள்ளது. அதனால், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாராக் கடன் மற்றும் பணப்புழக்க பற்றாக்குறை பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முயற்சி மேற்கொண்டுள்ளன.


பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் அமைய உள்ள மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த சிறிய வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைக்க முன்னுரிமை அளிக்கும். அது போல, பொதுத் துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டில், அதிக அளவில் வாராக்கடனை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


கைமாறும் நிறுவனங்கள்: திவால் சட்டத்தின் கீழ், ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. பூஷண் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த, ஜே.எஸ்.டபிள்யு., டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனம் ஏலத் தொகையாக, 19 ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளது.டாடா ஸ்டீல், ஏலத் தொகையை, 17 ஆயிரம் கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொண்டது.இரு பெரிய நிறுவனங்களின் கைமாறும் பணி, அடுத்த சில மாதங்களில் முடிவிற்கு வரும் என, தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)