பதிவு செய்த நாள்
27 மே2019
06:51
புதிய கார்களை விட, பயன்படுத்திய கார், சந்தையில் அதிக வளர்ச்சி காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டில், 3.6 மில்லியன் புதிய கார்கள் விற்பனையான நிலையில், 4 மில்லியன் பயன்படுத்திய கார்கள் விற்பனையானதாக, ‘மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸின்’ பயன்படுத்திய கார் அறிக்கை தெரிவிக்கிறது. தேர்தல் காலத்தில் ஏற்படும் சுழற்சி, பொருளாதாரா மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், புதிய கார் விற்பனை தேக்கம் அடைந்துள்ளது என்றால், கார் வாங்குபவர்கள், விலைக்கு ஏற்ற மதிப்பை நாடுவது, பயன்படுத்திய கார் விற்பனையை அதிகமாக்கியுள்ளது.
பொதுவாக, புதிய காரின் மதிப்பு, முதல் ஆண்டில் அதிகம் தேய்மானத்திற்கு உள்ளாகிறது. ஒரு சில மாதிரிகளில் இது, 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனவே, பலரும் பயன்படுத்திய காரை, குறைந்த விலையில் வாங்க விரும்புகின்றனர். மேலும் கார் உரிமையாளர்கள், மூன்று ஆண்டுகளில் அதை விற்றுவிட்டு, புதிய மேம்பட்ட காரை வாங்கவும் முற்படுகின்றனர். பயன்படுத்திய கார், சந்தை இன்னமும் பெருமளவில் அமைப்பு சாராததாகவே நீடிக்கிறது.
பெரும்பாலும் தனிநபர்களுக்கு இடையே தான் பரிவர்த்தனை நிகழ்கிறது. மேலும் வாங்குபவர், விற்பவர் என இரு தரப்பினருமே, சரியான மதிப்பில் தான் பரிவர்த்தனை செய்கிறோமா என, அறியாமல் இருக்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|