ஊதியம் ஒழுங்காக வரும் பி.எஸ்.என்.எல்., உத்தரவாதம் ஊதியம் ஒழுங்காக வரும் பி.எஸ்.என்.எல்., உத்தரவாதம் ...  ரிசர்வ் வங்கிக்கு சி.ஐ.சி., உத்தரவு; வாராக்கடன் நிறுவன தகவலை கேட்கிறது ரிசர்வ் வங்கிக்கு சி.ஐ.சி., உத்தரவு; வாராக்கடன் நிறுவன தகவலை கேட்கிறது ...
ஜி.எஸ்.டி., பிரிவுகளை இணைக்க வாய்ப்பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
07:08

புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யில், இரு வரிப் பிரிவுகளை ஒன்றாக இணைத்தால், மொத்த வருவாய் குறையும் ஆபத்து உள்ளதை அடுத்து, இணைப்பு திட்டத்தை தள்ளிப் போட, மத்திய வருவாய் துறை முடிவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரியில், பூஜ்யம், 0.25, 1, 3, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, எட்டு பிரிவுகள் உள்ளன.இவற்றில், ‘12, 18 சதவீத வரிப் பிரிவுகளை ஒன்று சேர்த்து, 15 சதவீதமாக நிர்ணயித்தால், ஜி.எஸ்.டி., நடைமுறை மேலும் சுலபமாகும்’ என, முன்னாள் மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் யோசனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து, மத்திய வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த மாதத்துடன், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது. வரி வசூல், தற்போது மெல்ல ஸ்திரமடைந்து வருகிறது. இதுவரை, நான்கு முறை மட்டுமே, வரி வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இரு வரிகளை ஒன்றாக இணைத்தால், மொத்த வருவாயில், 1 லட்சம் கோடி ரூபாய் வரை குறையும். ஏனெனில், தற்போது, 1,200க்கும் அதிகமான பொருட்களில், 42 சதவீதப் பொருட்களுக்கு, 18 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது; 15 சதவீத பொருட்களுக்கு, 12 சதவீத வரி விதிப்பு உள்ளது.

வரிகளை ஒன்றிணைத்து, 15 சதவீதமாக நிர்ணயித்தால், பெரும்பாலான பொருட்களின் வரி வருவாய் குறையும்; குறைந்த பொருட்களின் வரி வருவாய் அதிகரிக்கும். இது, ஒட்டுமொத்த வரி வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஜி.எஸ்.டி., வருவாய் மேலும் ஸ்திரமாகும் சூழலில், வரிகளை ஒன்றிணைப்பது குறித்து தீர்மானிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இலக்கை எட்டவில்லை:
கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மூலம், 13.38 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், வசூல் வளர்ச்சி மிதமாக இருந்ததால், இந்த இலக்கு, 11.48 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதம், சராசரியாக, 1.14 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், அது எட்டப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)