பதிவு செய்த நாள்
29 மே2019
04:01
புதுடில்லி: அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ்’ குழுமம், கடன் நெருக்கடி காரணமாக, அதற்கு சொந்தமான, ‘பிக்’ எப்.எம்., வானொலி சேவையை விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது.
‘பிக்’ எப்.எம்., ரேடியோ சேனல்களை, ‘ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெட்வொர்க்’ எனும் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு மொத்தம், 58 வானொலி நிலையங்கள் உள்ளன.இதில், 40 வானொலி நிலையங்களை, ’ரேடியோ சிட்டி’ எனும், வானொலி சேவையை வழங்கி வரும், ‘மியூசிக் பிராட்காஸ்ட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு, 1,050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.
மீதி, 18 சேனல்களை, வேறு ஒரு நிறுவனத்துக்கு, 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ரேடியோ சிட்டி சேவையை வழங்கி வரும், மியூசிக் பிராட்காஸ்ட்’ நிறுவனத்தின் இயக்குனர், அபூர்வா புரோகித் இது குறித்து கூறியதாவது:ரிலையன்சின், 40 சேனல்களை வாங்கிய பின், எங்கள் வசம், 79 சேனல்கள் இருக்கும். இதையடுத்து, நாட்டின் மிகப் பெரிய வானொலி சேவை நிறுவனமாக எங்கள் நிறுவனம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, அமித் பாப்னா கூறியதாவது:‘பிக்’ எப்.எம்., ‘ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட்’ உள்ளிட்ட சில வணிகங்களை விற்பனை செய்வதன் மூலம், நிறுவனத்தின் மொத்த கடனில், 70 சதவீதத்தை தீர்க்க முடியும் என, கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|