ரிசர்வ் வங்கிக்கு சி.ஐ.சி., உத்தரவு; வாராக்கடன் நிறுவன தகவலை கேட்கிறது ரிசர்வ் வங்கிக்கு சி.ஐ.சி., உத்தரவு; வாராக்கடன் நிறுவன தகவலை கேட்கிறது ...  சரக்கு போக்குவரத்துக்கு தனி துறை உருவாகிறது சரக்கு போக்குவரத்துக்கு தனி துறை உருவாகிறது ...
‘பிக்’ எப்.எம்., விற்பனை ‘ரிலையன்ஸ்’ முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2019
04:01

புதுடில்லி: அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ்’ குழுமம், கடன் நெருக்கடி காரணமாக, அதற்கு சொந்தமான, ‘பிக்’ எப்.எம்., வானொலி சேவையை விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது.

‘பிக்’ எப்.எம்., ரேடியோ சேனல்களை, ‘ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெட்வொர்க்’ எனும் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு மொத்தம், 58 வானொலி நிலையங்கள் உள்ளன.இதில், 40 வானொலி நிலையங்களை, ’ரேடியோ சிட்டி’ எனும், வானொலி சேவையை வழங்கி வரும், ‘மியூசிக் பிராட்காஸ்ட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு, 1,050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.

மீதி, 18 சேனல்களை, வேறு ஒரு நிறுவனத்துக்கு, 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ரேடியோ சிட்டி சேவையை வழங்கி வரும், மியூசிக் பிராட்காஸ்ட்’ நிறுவனத்தின் இயக்குனர், அபூர்வா புரோகித் இது குறித்து கூறியதாவது:ரிலையன்சின், 40 சேனல்களை வாங்கிய பின், எங்கள் வசம், 79 சேனல்கள் இருக்கும். இதையடுத்து, நாட்டின் மிகப் பெரிய வானொலி சேவை நிறுவனமாக எங்கள் நிறுவனம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, அமித் பாப்னா கூறியதாவது:‘பிக்’ எப்.எம்., ‘ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட்’ உள்ளிட்ட சில வணிகங்களை விற்பனை செய்வதன் மூலம், நிறுவனத்தின் மொத்த கடனில், 70 சதவீதத்தை தீர்க்க முடியும் என, கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)