பதிவு செய்த நாள்
29 மே2019
04:03
புதுடில்லி: அனைத்து வகை சரக்கு போக்குவரத்திற்கும், பொதுவான துறையை ஏற்படுத்த, மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, விமானம், ரயில், சாலை, நீர்வழி என, பல வகைகளில் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. எனினும், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ், சிறப்பு செயலர் தலைமையில், சரக்கு போக்குவரத்து பிரிவு செயல்படுகிறது. எனவே, சரக்கு போக்குவரத்திற்கு தனி துறையை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சகம், புதிய அரசு பொறுப்பேற்ற, 100 நாட்களில் முடிக்க வேண்டிய திட்டங்களை தயாரித்துள்ளது. அதில், சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தக உதவி துறையை உருவாக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம், பலதரப்பட்ட சரக்கு போக்குவரத்தை, சுலபமாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்வதற்கான வசதி, நிறுவனங்களுக்கு கிடைக்கும். இதனால், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|