சரக்கு போக்குவரத்துக்கு தனி துறை உருவாகிறது சரக்கு போக்குவரத்துக்கு தனி துறை உருவாகிறது ...  ஜூலை 10ல் மத்திய பட்ஜெட்? பரபரப்பில் மத்திய நிதியமைச்சக வட்டாரம் ஜூலை 10ல் மத்திய பட்ஜெட்? பரபரப்பில் மத்திய நிதியமைச்சக வட்டாரம் ...
மொத்த உள்நாட்டு உற்பத்தி எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2019
04:05

மும்பை: ‘கடந்த நிதியாண்டில், ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்தை விட குறைவாக இருக்கும்’ என, ‘எஸ்.பி.ஐ., எகோராப்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2018- – 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஜி.டி.பி., 6.1 – 5.9 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியை கண்டிருக்கும்.இதன் காரணமாக, கடந்த நிதியாண்டில், ஜி.டி.பி., 7 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்து, 6.9 சதவீதமாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.டி.பி., வளர்ச்சி சரிவால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.35 – 0.50 சதவீதம் வரை குறைக்க நேரிடும்.அடுத்த மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி உயர்வு குறித்த முடிவு தெரிய வரும். ரிசர்வ் வங்கி, இந்தாண்டு, ரெப்போ வட்டி விகிதத்தை, இரு முறை, தலா, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. எனினும், வங்கிகளின் டெபாசிட் மற்றும் கடன் விகிதாசார செலவினம், 0.70 சதவீதம் அளவிற்கே குறைந்துள்ளது. அதனால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை மேலும் குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை, 1 சதவீதம் குறைத்தால், 1.28 லட்சம் கோடி ரூபாய், நிதிச் சந்தைக்கு வரும்.இதன் மூலம், கடனுக்கான வட்டி, 0.15 சதவீதம் குறையும். வங்கிகளுக்கும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். புதிய அரசு, தேவைப்பாட்டை அதிகரித்து, உற்பத்தியை பெருக்கும் பட்சத்தில், ஜி.டி.பி., வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மாறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)