பதிவு செய்த நாள்
29 மே2019
04:05
மும்பை: ‘கடந்த நிதியாண்டில், ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்தை விட குறைவாக இருக்கும்’ என, ‘எஸ்.பி.ஐ., எகோராப்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2018- – 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஜி.டி.பி., 6.1 – 5.9 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியை கண்டிருக்கும்.இதன் காரணமாக, கடந்த நிதியாண்டில், ஜி.டி.பி., 7 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்து, 6.9 சதவீதமாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.டி.பி., வளர்ச்சி சரிவால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.35 – 0.50 சதவீதம் வரை குறைக்க நேரிடும்.அடுத்த மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி உயர்வு குறித்த முடிவு தெரிய வரும். ரிசர்வ் வங்கி, இந்தாண்டு, ரெப்போ வட்டி விகிதத்தை, இரு முறை, தலா, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. எனினும், வங்கிகளின் டெபாசிட் மற்றும் கடன் விகிதாசார செலவினம், 0.70 சதவீதம் அளவிற்கே குறைந்துள்ளது. அதனால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை மேலும் குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை, 1 சதவீதம் குறைத்தால், 1.28 லட்சம் கோடி ரூபாய், நிதிச் சந்தைக்கு வரும்.இதன் மூலம், கடனுக்கான வட்டி, 0.15 சதவீதம் குறையும். வங்கிகளுக்கும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். புதிய அரசு, தேவைப்பாட்டை அதிகரித்து, உற்பத்தியை பெருக்கும் பட்சத்தில், ஜி.டி.பி., வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மாறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|