மொத்த உள்நாட்டு உற்பத்தி எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை ...  ஒருமைப்பாட்டு சிலைக்காக  விருது பெற்றது எல் அண்டு டி ஒருமைப்பாட்டு சிலைக்காக விருது பெற்றது எல் அண்டு டி ...
ஜூலை 10ல் மத்திய பட்ஜெட்? பரபரப்பில் மத்திய நிதியமைச்சக வட்டாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2019
04:08

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்க உள்ள புதிய அரசு, நடப்பு, 2019 -– 20ம் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஜூலை, 10ல், தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

இந்தாண்டு பிப்ரவரியில், மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த, பியுஷ் கோயல், நடப்பு நிதியாண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, பார்லிமென்ட் ஒப்புதலுடன், புதிய அரசு அமையும் வரை, தேவையான நிதிச் செலவினங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதை அடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு, நாளை பதவியேற்க உள்ளது. கடந்த ஆட்சியில் நிதி, விமான போக்குவரத்து துறைகளில், துணை அமைச்சராக பணியாற்றிய, ஜெயந்த் சின்ஹாவுக்கு, புதிய அரசில், நிதியமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாளை பதவியேற்க உள்ளது. அதில் நிதியமைச்சர் பொறுப்பேற்ற பின், பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் முடிவு செய்யப்படும். பட்ஜெட் பணிகள் அனைத்தும், ஜூலை, 15க்குள் முடிக்கப்படுவது வழக்கம்; இம்முறையும், அது பின்பற்றப்படும். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான, ஆலோசனை கூட்டங்கள் துவங்கி விட்டன. நிதியமைச்சக அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். அதனால், பட்ஜெட் தேதி விரைவில் இறுதி செய்யப்படும். ஜூலை, 10ல், மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளது.

விவசாயி:
இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் ஏழைகள் நலன் உட்பட, ஆறு முக்கிய சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன், கிராமப்புற முன்னேற்றத்திற்கான மூன்று திட்டங்களுக்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இரண்டு ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறிய விவசாயிகளுக்கு, ஓராண்டில், மூன்று தவணைகளில், 6,000 ரூபாய் வழங்கும், ‘பிரதமர் விவசாயி பாதுகாப்பு நிதியுதவி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

புதிய அரசின் பட்ஜெட்டிலும், விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கிராமப்புறங்களில் நுகர்வு குறைந்துள்ளதை சமாளிக்கும் அம்சங்கள், புதிய பட்ஜெட்டில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இடைக்கால பட்ஜெட்டில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும், ‘பிரதமர் தொழிலாளர் ஓய்வூதிய’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட, அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாதம், குறைந்தபட்சம், 100 ரூபாய் செலுத்தி வந்தால், 60 வயதிற்குப் பின், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.

வருமான வரி:
நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வருமான வரி வரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நிறுவன ஊழியர்களின், நிலையான வரிக் கழிவிற்கான வரம்பு, 40 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த இரு அம்சங்களும், முழு நிதியாண்டு பட்ஜெட்டில் இடம் பெறும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயிகள் முன்னேற்றத்திற்கும் அவசியமான, நதி நீர் இணைப்பு திட்ட அறிவிப்பும் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது போல, நாட்டு மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், புதிய திட்டம் குறித்த அறிவிப்பையும், நிதியமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)